தேடல் தொடங்கியதே..

Wednesday 6 June 2012

கீழக்கரை நகராட்சி சார்பில் நடை பெற உள்ள நகர்ப் புற இளைஞர்களுக்கான 'இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி' !

கீழக்கரை நகராட்சி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) முஜீபுர் ரஹ்மான் அவர்கள் வெளியிட்டுள்ள கவுன்சிலர்களுக்கான சுற்றறிக்கையில் பின் வரும் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், வறுமைக்கோட்டு பட்டியலில் கண்டுள்ள, 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் (பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற / தோல்வி அடைந்த அல்லது அதற்கும் மேல் தகுதி உள்ள) நகர்ப் புற இளைஞர்களுக்கான 'இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி' அளிக்கப்பட உள்ளது.



அதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் சிறப்பு முகாம் நம் நகராட்சி வளாகத்தில் எதிர் வரும் 09.06.2012 மற்றும் 10.06.2012 தேதிகளில் (சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில்) நடை பெற இருக்கிறது. இந்த முகாமில் தேர்வு பெறுபவர்களுக்கு பின் வரும் கணினி மென்பொருள் வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் வழங்கப்பட இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் 

  • DIPLOMA IN BUSINESS ACCOUNTING APPLICATION
  •  COMPUTER FUNDAMENTALS
  •  MS OFFICE PACKAGE
  •  INTERNET, SOFT SKILLS  & DTP
  • COMPUTER HARDWARE & NETWORKING
  • ARCHITECTURAL & CIVIL 2D DRAFTING
  • AUTO CAD

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் கீழக்கரை நகர் சுற்று வட்டாரங்களில் உள்ள 'கிராமப் புற' இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி சிறப்பாக நடைபெற்று 50 க்கும் மேற்பட்டோர் பயனடைந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி
http://www.keelaiilayyavan.blogspot.in/2012/03/blog-post_4867.html 

மேலும் இது குறித்த தகவல்கள் பெற கீழக்கரை நகராட்சியை 04567 - 241317 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். 
 
இந்த நல்ல வாய்ப்பினை நழுவ விடாமல், நம் பகுதி இளைஞர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினர்கள்,  நகராட்சி நடத்தும் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment