கீழக்கரை நகரில் நிலவுகின்ற குறைபாடுகளை களையும் நல்ல நோக்கோடும், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், நகராட்சி அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் மக்கள் விரோதப் போக்கினைக் கண்டித்தும், தமிழக அரசின் கவனத்தை கீழக்கரையின் மீது விழச் செய்யும் விதமாகவும் கவன ஈர்ப்பு நடைபயணம் நடைபெறுகிறது.
இதில் கவுன்சிலர்கள் சாகுல் ஹமீது, தங்கராஜ், அன்வர் அலி, முகைதீன் இபுறாகீம், ஹாஜா நஜிமுதீன், ஜெயப் பிரகாஷ் ஆகியோர்கள் தலைமையில் இன்று (18.07.2012) காலை 7.30 மணியளவில் கீழக்கரை முக்கு ரோட்டில் இருந்து புறப்பட்டது. இந்த நடை பயணம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.
கீழக்கரை நகராட்சிக்கு தனி ஆணையர் நியமனம், கீழக்கரை நகரின் சுகாதார நலன் கருதி கூடுதல் துப்பரவு பணியாளர்கள் நியமனம், கீழக்கரை நகரின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் மெத்தனம் காட்டும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை, ஊழலுக்கு துணை போகும் மக்கள் பிரதிநிதிகள், ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பொதுமக்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் (செவிடன் காதில் சங்கு போல்) மெத்தனம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை
முறையான திட்டங்கள் இல்லாமல் மக்கள் வரிப் பணம் சீரழிக்கப்படுவதை தடுப்பது, கீழக்கரை காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்கள், கீழக்கரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமனம், ரேசன் கடை முறைகேடுகளை தடுத்தல், கூடுதல் மின் வாரிய ஊழியர்கள் நியமனம், கேஸ் சிலிண்டர்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் எரிவாயு ஏஜென்சி ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி இந்த நடைபயணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...
ReplyDeletevry nice t heare this, Almaighity give u the great in this issue
ReplyDelete