தேடல் தொடங்கியதே..

Tuesday 17 July 2012

கீழக்கரையின் சுகாதார சீர்கேட்டை தோலுரித்து காட்டும் 'ஜீ தமிழ்' தொலைகாட்சி - சொல்வதெல்லாம் உண்மை !

கீழக்கரை நகர் நல இயக்கத்தினரின் மாபெரும் முயற்சியால், கீழக்கரையின் சுகாதார சீர்கேடுகள் ஜீ தமிழ் தொலைகாட்சியின் 'சொல்வதெல்லாம் உண்மை, நிகழ்ச்சியின் மூலம் தோலுரித்து காட்டப்பட்டுள்ளது. இந்த நல்ல நிகழ்ச்சியின் மூலம், எங்கு நோக்கினும் சாக்கடையின் வாசனைகளும், குப்பைகளின் கோரப் பிடியில் புதுப் புது வியாதிகளின் சங்கமமும்  வியாபித்து நிற்பதை, உள்ளக் குமுரலாய், நகர் வாசிகள் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள். 




கீழக்கரையின் இந்த சின்ன குப்பை பிரச்சனையை இவ்வளவு தூரம், மீடியா அளவிற்கு கொண்டு சென்று பெரிது படுத்த வேண்டுமா? என்று சில அறிவிலிகள் கேட்பதுண்டு. நம் இந்திய திருநாட்டில் ஜனநாயகத்தின் முதல் மூன்று தூண்களாக வர்ணிக்கப்படும் நாடாளுமன்றம்-சட்டமன்றம், நீதித்துறை, அதிகாரம் ஆகிய அனைத்தும் அரசின் கீழ் இருக்கும் நிலையில், நான்காவது தூணாக வர்ணிக்கப்படும் (மீடியா) செய்தி ஊடகங்கள் மட்டுமே மக்களின் குரலாக, உண்மைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் சத்தியவானாக சுதந்திரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. 




ஆண்டாண்டு காலமாய் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாத பல விசயங்களை, பிரச்சனைகளை, எளிதில் அரசாங்கத்தின் பார்வைக்கு எடுத்து செல்லும் பலம் பொருந்திய இந்த நான்காம் தூணை, நம் கீழக்கரை நகர் நல இயக்கத்தினர் நாடியதில் தவறொன்றும் இல்லை.

கீழக்கரையா? குப்பைக்கரையா? என்று சாடும் அளவிற்கு கீழக்கரை நகரின் சுகாதார சீர்கேட்டினை, உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய  'ஜீ தமிழ்'  தொலைக்காட்சியின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகளை காண, கீழ் காணும் லிங்கில் சொடுக்கி பார்வையிடவும்.

இங்கே கிளிக் செய்க


இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி. 
கீழக்கரை நகருக்குள் சாக்கடை ஆறுகளை கடக்க 'படகு போக்குவரத்து' - பொது மக்கள் வேண்டுகோள் !


(குறிப்பு : தற்போது 1ஆம் வார்டுக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில், பல்லாண்டு காலமாக ஓடிக் கொண்டிருந்த சாக்கடை நதிக்கு மட்டும் விடிவு கிடைத்துள்ளது).

இந்த சுகாதார சீர்கேட்டினால் உருப்பெறும் கொலை வெறிக் கொசுக்கள் "காலையில் கடித்தால் டெங்கு, மாலையில் கடித்தால் மலேரியா" என்ற அவல நிலையில், இனியாவது எங்களுக்கு ஒரு நல்ல காலம் பிறக்காதா? என  ஏங்கித் தவிக்கும் பொது மக்களின் குமுறல்களுக்கு, நிரந்தர தீர்வாக, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பார்வை நம் கீழக்கரையின் மேல் விழுமா ? இனியொரு மாற்றம் பிறக்குமா ??

No comments:

Post a Comment