இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை கடந்த ரமலான் மாதத்தில் கடைபிடித்து வந்தனர். இதையடுத்து நேற்று முன் தினம் முப்பது நோன்புகள் நிறைவடைந்த நிலையில், ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள் நோன்பு முடித்து, நேற்று (20.08.2012) ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் நேற்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இறைவனை தொழுதுவிட்டு தங்களது நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இஸ்லாமியர்கள் அல்லாத சகோதரர்களும், தங்களது இஸ்லாமிய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை நேரடியாகச் சென்றும், தொலைபேசியில் அழைத்தும் தெரிவித்து வருகின்றனர். நோன்புப் பெருநாளை அனைத்து இஸ்லாமியர்களுக்கும், கீழை இளையவன் வலை தளம் சார்பில் எங்களது ரம்ஜான் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment