தேடல் தொடங்கியதே..

Tuesday 23 October 2012

கீழக்கரையில் சாரல் மழை தொடர்வதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !

கீழக்கரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சாரல் மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் வறண்டு கிடந்த இடங்கள் தண்ணீர் மயமாக காட்சியளிக்கிறது. இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழையின் சராசரி மழையின் அளவு 20 .22 மில்லி மீட்டர் ஆகும்.

(மழையை இரசித்தவாறு வீதிகளை கடக்கும் போது 'கிளிக்'கிய புகைப்படங்கள்)

















சாரல் இன்னும் வரும்...

நேற்று இரவு முதல் இடை விடாது பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டினுள்ளே முடங்கி கிடக்கின்றனர். சாலையோர சிறு வியாபாரிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது குளுமையான சீதோசன நிலையால் நகரமெங்கும் மிக இரம்மியமான சூழல் நிலவுகிறது.

1 comment:

  1. photo elam mega arumai... mammalum keelaiilayyavan valara valtukal... nandri

    by. www.99likes.blogspot.com

    ReplyDelete