தேடல் தொடங்கியதே..

Sunday 21 October 2012

கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் வரவழைக்கப்பட்டுள்ள 'குர்பானி' ஒட்டகங்கள் !

கீழக்கரையில் ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி, இஸ்லாமிய சட்டப்படி குர்பானி கொடுப்பதற்காக, கீழக்கரை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இராஜஸ்தானிலிருந்து ஒட்டகங்கள் வரவழைக்கப்படும். அதே போல் இந்த ஆண்டும்,  இரண்டு ஒட்டகம்  வரவழைக்கப்பட்டுள்ளன. இதே போன்று பக்ரீத் பண்டிகையையொட்டி பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர்களும், இஸ்லாமிய பெருமக்களும் மூன்று நாட்களுக்கு ஒட்டகம், மாடு, ஆடுகள் குர்பானி கொடுத்து அதன் இறைச்சிகளை, இறை வழியில் முஸ்லீம்களுக்கும், உறவினர்களுக்கும், ஏழை எளியோர்களுக்கும்  வழங்கி மகிழ்வர்.


கீழக்கரைக்கு வரவழைக்கப்பட்டுள்ள அந்த இரண்டு ஒட்டகங்களும், கீழக்கரை 500 பிளாட்டில் உள்ள தனியார் தோப்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வழக்கம் போல பக்ரீத் பண்டிகையிலிருந்து மூன்றாவது நாள் இவை குர்பானி கொடுக்கப்படும் என TNTJ நிர்வாகி ஜனாப். ஹாஜா மைதீன் அவர்கள் தெரிவித்தார். கடந்தாண்டு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு, 12 ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டு குர்பானி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


தற்போது கீழக்கரை நகருக்குள் குடிநீர்க் குழாய்களுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால், சாலைகள் உருக்குலைந்து போயுள்ளதால், ஒட்டகங்களை ஊருக்குள் அழைத்து வர வேண்டாம் என்றும் அழைத்து வந்தால் ஒட்டகங்கள் இடறி விழும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சில சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment