தேடல் தொடங்கியதே..

Sunday 21 July 2013

தமிழகம் முழுவதும் ரமலானில் உலமாக்களை கண்ணியப்படுத்தும் 'கும்பகோணம் ஒயிட் ஹவுஸ்' குடும்பத்தாரின் சிறப்பான நற்சேவை !


தமிழகம் முழுவதும் வாழும், உலமாப் பெருந்தகைகளை கண்ணியப்படுத்தும் நல்ல நோக்கத்தோடும், ஈகைத் திருநாளை ஆலீம்கள் மகிழ்வோடு கொண்டாட வழிவகை செய்யும் பொருட்டும், வருடம் தோறும் ரமலான் மாதத்தில், 'கும்பகோணம் ஒயிட் ஹவுஸ்' குடும்பத்தினர், உலமாக்களின் குடும்ப அங்கத்தினர் அனைவர்களுக்கும் புத்தாடைகள், சிறப்பான நிதியுதவிகள் என நிறைவோடு வழங்கி வருகின்றனர். 




கீழக்கரையில் அதற்கான நிகழ்வு பழைய குத்பா பள்ளி வளாகத்தில் நேற்று (20.07.2013) சனிக் கிழமை காலை 10 மணியளவில், எவ்வித ஆடம்பர அறிவிப்புக்களுமின்றி, மிக எளிமையாக நடை பெற்றது. அதில் 100க்கும் மேற்பட்ட உலமா பெருமக்கள் கலந்து கொண்டனர். கும்பகோணம் 'ஒயிட் ஹவுஸ்' குடும்பத்தில் காலம் சென்ற மர்ஹூம். மௌலவி M.அப்துல் ஹை (பாகவி) அவர்களின் உறுதியான விருப்பபடி, அன்னாரின் வாரிசுதாரர்கள், வருடம் தோறும் உலமாக்களை கண்ணியப்படுத்தி வருகிறார்கள்.

எல்லாம் வல்ல இறையோன் அல்லாஹ், அன்னாரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும், இம்மையிலும், மறுமையிலும் சிறப்பான நற் கூலியை வழங்க, கீழை இளையவன் வலை தளம் சார்பாக இறைஞ்சுகிறோம்.

FACE BOOK COMMENTS :

Like ·  · Unfollow Post · Share · Edit
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை'அல்ஹம்துலில்லாஹ்.. எவ்வளவு தான் கோடி, கோடியாக பணம் நிறைந்து வழிந்தாலும், அதனை பிறருக்கு தர்மம் செய்ய வேண்டும் என்கிற மனம் வேண்டும். அதிலும் நம் சமுதாயத்தில், தங்கள் வாழ்க்கையை முழுவதுமாக தீனுக்கு அர்பணித்துள்ள ஆலீம் பெருமக்களுக்கு, இது போன்று தாராளமாகஜகாத்தை அள்ளித் தரும் கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் குடும்பத்தாருக்கு, அழகிய நற் கூலியை எல்லாம் வல்ல வல்லோன் அல்லாஹ் ஒருவனே வழங்க போதுமானவன்.

    இதனை முன்னுதாரணமாக கொண்டு, அனைத்து ஊர்களிலும் உள்ள செல்வந்தர்கள் கொடை வள்ளல்கள்... ஆலீம்களின் வாழ்வு பிரகாசிக்க முயற்சிக்க வேண்டும்.
  • Syed Abusalique Seeni Asana this is 4th year distribution in this masjid.. for all kadaladi undriyum ulamakal matrum muathingal. silenta nadakum.. yarukum veliya theriyathapadi seiranga.. ticket (invitation) for this distribution athulaiyum varthaigal miga miga kanniyamagaum alagagavum, indraya ulagirku thothaga naveena muraiyil barcode uthaviyudan erukkum. sirappana saevai.. pirar pinbatravaendiya vali murai

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்21 July 2013 at 18:56

    கீழை இளையவனோடு கை கோர்த்து இரு கரம் ஏந்தி வல்ல நாயனிடத்தில் இறைஞ்சுகின்றோம்.ஆமீன்

    ReplyDelete