தேடல் தொடங்கியதே..

Monday 11 November 2013

கீழக்கரை நகராட்சி சேர்மனுடன் தெற்குதெரு முஸ்லிம் பொதுநல சங்கத்தினர் சந்திப்பு - 18 வது வார்டு பகுதியில் வாருகால்களை விரைந்து சீரமைக்க வேண்டுகோள் !

கீழக்கரை தெற்குதெரு முஸ்லிம் பொதுநல சங்கம் சார்பில் 18 வது வார்டு பகுதியில் சின்னக்கடை தெருவில் இருந்து தெற்குதெரு வழியாக பேட்டைதெரு ( யூசுப் சுலைஹா கிளினிக் ) வரை உள்ள கழிவுநீர் கால்வாய்களுக்கு ஒரு அடி தூர்வாரி கால்வாய் மூடி போட வேண்டும் என கீழக்கரை நகராட்சி தலைவரிடம் நேரில் கோரிக்கை விடுத்தனர். இந்த சந்திப்பின் போது சங்கத்தின் தலைவர் நியாஸ் அவர்கள் தலைமையில் சங்கத்து உறுப்பினர்கள் 18 வது வார்டு கால்வாய் மூடி விசயமாக நகராட்சி அலுவலத்திற்கு நேரில் சென்று சேர்மன் அவர்களிடம் மனு கொடுத்தனர்.





இது குறித்து பதிலளித்த நகராட்சி சேர்மன் ராவியத்துல் கதரியா ரிஸ்வான் அவர்கள் இந்த விசயமாக போர்கால அடிப்படையில் குறுகிய காலத்தில் கால்வாய் மூடி போட்டுத் தருகிறேன் என்று உறுதி அளித்துள்ளார். இதற்கு சங்கத்து சார்பில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் சேர்மன் அவர்களுக்கு நன்றி கூறினர்.

1 comment:

  1. மேன் மேலும் நமது முஸ்லிம் பொதுநல சங்க பணிகள் சிரக்க ஏக இறைவனிடம் துவா செய்யுமாரு கேட்டு கொள்கிரோம்..

    www.mpnskilakarai.blogspot.com

    . ♥ ♥ அன்புடன் ♥ ♥
    S. முகம்மது நவ்சின் கான்.(99likes)

    ReplyDelete