தேடல் தொடங்கியதே..

Sunday 15 April 2012

கீழக்கரையில் இன்று (15.04.2012) நடைபெறும் 'போலியோ சொட்டு மருந்து முகாம்' !

இந்தியா முழுவதும் 17 கோடி குழந்தைகளுக்கு இரண்டாவது தவணையாக போலியோ தடுப்பு கூடுதல் சொட்டு மருந்து இன்று (15.04.2012) வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இளம்பிள்ளை வாதம் என்ற நோயை  முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த சொட்டு மருந்து இலவசமாக அளிக்கப்படுகிறது.




தமிழகத்தில் 40,000 மையங்கள்:
  தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு வைத்திய சாலைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், அரசு மருத்துவக் கல்லூரி வைத்தியசாலைகள் மற்றும் முக்கிய இடங்களில் சுமார் 40,000 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.


விழிப்புணர்வு பிரசாரத்தில் களமிறங்கி இருக்கும் சிறுவர்கள் !  ( இடம் : நடுத் தெரு )

நம் கீழக்கரை நகராட்சி பகுதிகளில் இன்று (15ம் தேதி) இரண்டாம் கட்டமாக போலியோ சொ ட்டு மருந்து வழங்கும் முகாம் நடை பெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடந்த முகாமில் போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தைகளுக்கும் கட்டாயம் வழங்க வேண்டும். கீழக்கரையில் இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி, ஹமீதியா தொடக்கப் பள்ளி, கிழக்குத் தெரு பள்ளிவாசல் நுழைவு வாயில் போன்ற இடங்களில் நடை பெற்று வருகிறது.  



கிழக்குத் தெரு பள்ளிவாசல் அறிவிப்பு பலகை

இந்த முகாம் மாலை 5 மணி வரை நடை பெற இருக்கிறது. ஆகவே தவறாது தாய்மார்கள் அனைவரும், இந்த இலவச முகாமை பயன்படுத்தி 5 வயதுக்கு உட்பட்ட தங்கள் குழந்தைகள் அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்து கிடைக்க செய்யும் படி கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். மேலும் வெளிநாடு வாழ் சகோதரர்கள், தங்கள் வீடுகளுக்கு தொடர்பு கொண்டு, இந்த முகாமிற்கு செல்ல அறிவுறுத்துமாரும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment