தேடல் தொடங்கியதே..

Wednesday 18 April 2012

கீழக்கரை 500 பிளாட் பகுதியில் தாகம் தீர்க்கும் 'நீர் மோர் பந்தல்' திறப்பு - கீழக்கரை த.மு.மு.க முயற்சி !

நம் கீழக்கரை நகரின் புற நகர் பகுதியாக இருக்கும் 500 பிளாட் பகுதியில், மரங்கள் மிகுதியாக இருப்பினும், கோடை வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாகவே இருக்கிறது. இதனால் இந்த பகுதியில் இருந்து, ஊருக்குள் நடை பயணமாக வரும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 




ஆகவே கொளுத்தும் கோடையில் இந்த பகுதி மக்களின் தாகம் தீர்க்க,  கீழக்கரை தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா நேற்று காலை நடை பெற்றது. இதனால் அந்த பகுதி பொது மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு கீழக்கரை த.மு.மு.க தலைவர் செய்யது இபுராகிம் தலைமை தாங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் தஸ்பீக், மமக செயலாளர் அன்வர், கீழக்கரை நகர் செயலாளர் இக்பால், பொருளாளர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் நகர் நிர்வாகிகள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment