நம் கீழக்கரை நகரில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், கீழக்கரை நகர் நல இயக்கம் மற்றும் மீனாட்சி மிசன் மருத்துவமனை இணைந்து நடத்தும் உதடு / உள் அண்ணம் பிளவுபட்டோருக்கான இலவச மருத்துவ முகாம் இன்று (17.04.2012) மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள கீழக்கரை நகர் நல அலுவலகத்தில் (K.T.M.பில்டிங், பாண்டியன் கிராம வங்கி அருகில்) நடை பெற உள்ளது.
| முகாம் நடைபெற்ற போது எடுத்த படம் (UPDATED PHOTO) |
இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் ஜனாப். செய்யது இபுராஹீம் ( இரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் - ஓய்வு ) அவர்கள் கூறும் போது " இந்த இலவச முகாமில் புதிதாக பிறந்த குழந்தைகள் முதல் 40 வயது வரை உள்ள உதடு, உள் அண்ணம் பிளவுபட்டோருக்கு அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
| ஜனாப். செய்யது இபுராஹீம் அவர்கள் |
![]() |
கீழக்கரை நகர் நல இயக்கத்தின் நிர்வாகிகள் |
அறுவை சிகிச்சை தேவைப்படும் போது, பிளாஸ்டிக் சர்ஜரி, மருந்து, மாத்திரை, உணவு, இருப்பிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆகவே நம் நகர் மக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
| கீழக்கரை நகர் நல இயக்கத்தினரால் வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸ் |
தாங்களுக்கு தெரிந்த, நபர்கள் எவெரேனும் மேற்கண்ட பாதிப்புக்குள்ளாகி இருந்தால், அவர்களை இந்த முகாமில் கலந்து கொள்ள அறிவுறுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம்.


intha erpattai seitha anaivarukkum nantri
ReplyDelete