தேடல் தொடங்கியதே..

Tuesday 17 April 2012

கீழக்கரையில் இன்று (17.04.2012) நடைபெறும் உதடு, அண்ணம் பிளவுபட்டோருக்கான இலவச மருத்துவ முகாம் !

நம் கீழக்கரை நகரில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், கீழக்கரை நகர் நல இயக்கம் மற்றும் மீனாட்சி மிசன் மருத்துவமனை இணைந்து நடத்தும் உதடு / உள் அண்ணம் பிளவுபட்டோருக்கான இலவச மருத்துவ முகாம் இன்று (17.04.2012) மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள கீழக்கரை நகர் நல அலுவலகத்தில் (K.T.M.பில்டிங், பாண்டியன் கிராம வங்கி அருகில்) நடை பெற உள்ளது.


முகாம் நடைபெற்ற போது எடுத்த படம் (UPDATED PHOTO)
 


இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் ஜனாப். செய்யது இபுராஹீம் ( இரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் - ஓய்வு ) அவர்கள் கூறும் போது " இந்த இலவச முகாமில் புதிதாக பிறந்த குழந்தைகள் முதல் 40 வயது வரை உள்ள உதடு, உள் அண்ணம் பிளவுபட்டோருக்கு அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது.


ஜனாப். செய்யது இபுராஹீம் அவர்கள்

கீழக்கரை நகர் நல இயக்கத்தின் நிர்வாகிகள்

அறுவை சிகிச்சை தேவைப்படும் போது, பிளாஸ்டிக் சர்ஜரி, மருந்து, மாத்திரை, உணவு, இருப்பிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆகவே நம் நகர் மக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

முகாமிற்கு வந்திருந்த பொதுமக்கள் (நேரம் : மாலை 4 மணி)
கீழக்கரை நகர் நல இயக்கத்தினரால் வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸ்

தாங்களுக்கு  தெரிந்த, நபர்கள் எவெரேனும் மேற்கண்ட பாதிப்புக்குள்ளாகி இருந்தால், அவர்களை இந்த முகாமில் கலந்து கொள்ள அறிவுறுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம். 

1 comment: