தேடல் தொடங்கியதே..

Saturday 12 May 2012

கீழ‌க்கரை காவல்நிலையத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்ப்பு நாள் !

கீழக்கரை காவல் நிலையத்தில் இன்று (12.05.2012) மாலை 4.30 மணியளவில் பொது மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடை பெற்றது. இதில் காவ‌ல்துறை சார்பில் டி.ஐ.ஜி ராம‌சுப்பிர‌ம‌ணிய‌ன் அவர்கள் மற்றும் எஸ்.பி காளிராஜ் மகேஷ் குமார் அவர்கள் முன்னிலையில் ஏராளாமான‌ பொதும‌க்க‌ள் க‌ல‌ந்து கொண்டு கோரிக்கை ம‌னுக்கள் அளித்த‌ன‌ர்.


கீழக்கரை புதிய கடல் பாலத்தில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்வது, கீழ‌க்க‌ரையில் புறக்காவ‌ல் நிலைய‌ம் அமைப்ப‌து, போக்குவ‌ர‌த்து காவலர்களை நிய‌மிப்ப‌து, அனுமதிக்கப்படாத வேளைகளில் மதுக்கடைகளை திறந்து விற்பனை செய்வதை தடுப்பது, ஏர்வாடியில் அடையாள‌ம் தெரியாத‌ ந‌ப‌ர்க‌ளின் ந‌ட‌மாட்ட‌த்தை க‌ண்காணிப்ப‌து, க‌ள் விற்ப‌னையை த‌டுப்ப‌து.



இலஞ்சம் பெரும் காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது, 'நோ பார்க்கிங்' பகுதிகளில் அத்து மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட‌ ப‌ல்வேறு கோரிக்கைக‌ளை வ‌லியுறுத்தி பொதும‌க்க‌ள் சார்பில் 42 ம‌னுக்க‌ள் காவ‌ல்துறையின‌ரிட‌ம் அளிக்க‌ப்ப‌ட்ட‌து.




இந்த நிகழ்ச்சியில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என‌ காவ‌ல் துறை உய‌ர் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

No comments:

Post a Comment