தேடல் தொடங்கியதே..

Wednesday 9 May 2012

TNPSC நடத்தும் 10718 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு - கீழக்கரை பகுதி மக்கள் விண்ணப்பிக்க வேண்டுகோள் !

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இளநிலை உதவியாளர் போன்ற குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வுகள் ஜூலை 7-ந் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட அரசு துறைகளில் 30 ஆண்டுகாலமாக இளநிலை உதவியாளர்கள் போன்ற பணியிடங்கள் ஆயிரக்கணக்கில் நிரப்பப்படாமல் உள்ளன.


குரூப் - 4 நிலையில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்காக, 10 ஆயிரத்து 718 பேரை தேர்வு செய்யும் அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., அன்று தன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.  பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த தேர்வினை எழுதலாம். (விரிவான விபரங்களுக்கு இணையதளத்தை பார்வையிடவும்) இத்தேர்வுகளுக்கு, மே 28ம் தேதி வரை இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஆர்.நடராஜ் அவர்கள் (தலைவர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்)

எல்லாமே "ஆன்-லைன்' தான்: தேர்வர்கள் அனைவரும், "ஆன்-லைன்' மூலமே தேர்வுக்கு பதிவு செய்ய வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கென, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள 805 இந்தியன் வங்கி கிளைகள் மற்றும் தபால் அலுவலகங்களில் உதவி மையங்களை அமைத்துள்ளது. இங்கு சென்று, இணையதளம் வழியாக, தேர்வுக்கு பெயரை பதிவு செய்யலாம்.

TNPSC அதிகாரப்பூர்வ இணையதள முகவரி (தேர்வுக்கு விண்ணப்பிக்க )
www.tnpsc.gov.in 


தேர்வு கட்டணம்: குரூப் - 4 தேர்வர்கள், விண்ணப்பக் கட்டணமாக 50 ரூபாயும், தேர்வுக் கட்டணமாக 75 ரூபாயும் செலுத்த வேண்டும் எனவும், செயல் அலுவலர் தேர்வை எழுதுபவர்கள், விண்ணப்பக் கட்டணத்துடன், தேர்வுக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இலட்சக்கணக்கானோர் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் எழுத இருக்கும் இந்த தேர்வினை, நம் பகுதி ஆர்வமுடையவர்கள், தகுதியுடையவர்கள் அனைவரும், கடைசி நேர பரபரப்பினைத் தவிர்க்க, விரைந்து விண்ணப்பிக்குமாறு எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். 

1 comment: