தேடல் தொடங்கியதே..

Saturday 5 May 2012

கீழக்கரை பகுதியிலிருந்து 'ஒரு ஐ.ஏ.எஸ்' - கீழக்கரை மாவிலாத்தோப்பை சேர்ந்தவர் தேசிய அளவில் 5 ஆம் இடம் பிடித்து வெற்றி வாகை !

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. இதில், மொத்தம் 910 பேர் நாடு முழுவதும் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில், 104 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.கடந்தாண்டை போலவே, இந்தாண்டும், முதல் இரண்டு இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர்.



இதில் தமிழகத்தை சேர்ந்த திரு. கோபால சுந்தர ராஜ் (வயது 27) , அவர்கள் அகில இந்திய அளவில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இவர் நம்  கீழக்கரை தாசீம் பீவி மகளிர் கல்லூரி அருகில் உள்ள மாவிலாதோப்பு பகுதியை சேர்ந்த லேட். சண்முகவேல் மற்றும் ராஜம்மாள் அவர்களின் மகன் ஆவார். 

கீழக்கரை பகுதி மாவிலா தோப்பின் நுழைவு
இவர் ஆரம்ப கல்வியை, கீழக்கரை மாவிலாத் தோப்பிலுள்ள நாடார் நடுநிலைப் பள்ளியிலும், மேல் நிலைப் பள்ளிப் படிப்பை இராமநாதபுரம் செய்யதம்மாள் பள்ளியிலும், கல்லூரி படிப்பை கோவை விவசாய கல்லூரியிலும் படித்தவர் எனபது குறிப்பிடத்தக்கது. இவர் டில்லி வஜ்ரம் ரவி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர் ஆவார்.


IAS விதை தூவப்பட்ட மாவிலாத் தோப்பிலுள்ள நாடார் நடுநிலைப் பள்ளி
 இது குறித்து கீழக்கரை மாவிலா தோப்பில் வசிக்கும் இவரின் சிறிய தகப்பனார் முருகேசன் அவர்கள் கூறும் போது "இந்த மாபெரும் வெற்றி எங்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றியைக் காண, எனது அண்ணன் மறைந்த சண்முகவேல் அவர்கள் இல்லையே.. என்பது மட்டுமே குடும்பத்தார் அனைவரின் வருத்தமாக இருக்கிறது.


சிறிய தகப்பனார் முருகேசன் அவர்கள்

சிறு வயதிலிருந்தே கூர்மையான அறிவுடன் வளர்ந்த எங்கள் மகனார், தற்போது தேசிய அளவில் 5 ஆம் இடம் பிடித்திருப்பது எங்கள் பகுதி மக்களுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது." என்று ஆனந்த கண்ணீருடன் தெரிவித்தார்.


சிறு வயதில் குடும்பத்தாருடன் (இடது புறத்தில் முதலாவதாய் நிற்பவர்)
 நம் பகுதியிலிருந்து ஐ.ஏ.எஸ் தேர்வுகளுக்கு முயற்சிப்போர் மிகக் குறைவானதாகவே இருந்து வரும் தருணத்தில், ஆர்வமுடையோர்களை ஊக்குவிக்கும் முகமாக, கீழை இளையவன் IAS வழிகாட்டி வலை தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

கீழை இளையவன் IAS வழிகாட்டி வலை தளத்தின் முகவரி
http://keelaiilayyavanias.blogspot.in/ 

நம் இந்திய தேசத்திற்கு அரும் பணியாற்றி, மென்மேலும் வெற்றி வாகைகள் சூட, திரு. கோபால சுந்தர ராஜ்  அவர்களுக்கு எங்கள் கீழை இளையவன் வலைத்தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

1 comment: