தேடல் தொடங்கியதே..

Wednesday 15 May 2013

கீழ‌க்க‌ரையில் 50க்கும் மேற்ப‌ட்ட‌ நாய்க‌ளுக்கு க‌ருத்த‌டை சிகிச்சை - கீழக்கரை நகர் நல இயக்கத்தின் கோரிக்கையின் பேரில் நடவடிக்கை !


கீழக்கரையில் சமீப காலமாக வெறி நாய்களின் பெருக்கம் அதிகரித்து வந்த வண்ணம் இருந்தது. கீழக்கரை நகருக்குள் உள்ள பெரும்பாலான தெருக்களிலும், சாலைகளிலும் ஏராள‌மான‌ சொறி நாய்களும் சுற்றித் திரிந்து வந்தன. இதனால் இரவு நேரங்களில் தெருக்களில் நடப்பதற்கே அச்சப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர் 



இதனிடையே கீழக்கரை நகர் நல இயக்கத்தின் சார்பாக, கீழக்கரை நகரில் பெருகி வரும் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும்,  சொறி நாய்களின் அட்டகாசத்திலிருந்து பொது மக்களை காப்பாற்றவும் உடனடி நடவடிக்கை எடுக்க கோரி கீழக்கரை நகர் நல இயக்கத்தினர், மாவட்ட ஆட்சியருக்கும், சம்பந்தப்பட்ட துறையினருக்கும் மனு அனுப்பி இருந்தனர். 


இது குறித்து நாம் ஏற்கனேவே வெளியிட்டிருந்த செய்தி 


கீழக்கரையில் சுற்றித் திரியும் சொறி நாய்கள் - அசம்பாவிதங்கள் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க 'கீழக்கரை நகர் நல இயக்கம்' மாவட்ட ஆட்சியருக்கு மனு !


இதையடுத்து, கீழக்கரை நகராட்சியின் சுகாதாரத் துறையினரின் ந‌ட‌வ‌டிக்கையின் பேரில், கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் அதிக‌ரித்து வ‌ரும் நாய்களை க‌ட்டுப்ப‌டுத்த‌ அவைக‌ளுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டு, கீழக்கரை நகருக்குள் சுற்றி திரிந்த 50க்கும் மேற்ப‌ட்ட, நாய்களை ந‌க‌ராட்சி துப்புரவுப் ப‌ணியாள‌ர்க‌ள் உத‌வியுட‌ன்‌ நாய்களை பிடித்தனர். 




இது குறித்து கீழக்கரை நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் திரு.திண்ணாயிர மூர்த்தி அவர்கள் கூறும் போது "கீழக்கரை நகரில் பெருகி வரும் நாய்களால் பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக புகார்கள் வந்ததையடுத்து 50க்கும் மேற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து நாய்களுக்கும் மயக்க ஊசி போட்டு கருத்தடை குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷனும் நாய்களுக்கு வெறி தன்மை குறையும் ஊசியும் போடப்பட்டது. இதனால் கீழக்கரையில் நாய்களின் பெருக்கம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார். 


FACE BOOK COMMENTS :
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' கீழக்கரையில் முப்பது வருடங்களுக்கு முன்னால் எல்லாம், நகராட்சி சார்பாக நாய் பிடிக்க வருபவர்கள் கைகளில் ஒரு கம்பி வளையமும், ஒரு உருட்டுக் கட்டையும் வைத்திருப்பார்கள். வளையத்தை வைத்து நாயின் கழுத்தில் மாட்டிய உடன், உருட்டுக் கட்டையை வைத்து நாயின் தலையில் 'நச்' என்று ஒரே அடி. தலையில் ரத்தம் சொட்ட செத்துப் போகும். பின்னர் இது சாகடிக்கும் மொத்த நாய்களையும், ஏதாவது ஒரு தோட்ட முதலாளியிடம் விற்று, மரங்களுக்கு உரமாக்கி விடுவார்கள்.

    ஆனால் இப்போது அப்படி எல்லாம் செய்து விட முடியாது. பளு கிராஸ் அங்கத்தினர்கள் குதறி விடுவார்கள். வெறி நாயாக இருந்தாலும் சரி, சொறி நாயாக இருந்தாலும் சரி, அதற்கு குடும்ப கட்டுப்பாடு எல்லாம் செய்து, ஊட்ட சத்து ஊசிகள் போட்டு மீண்டும் நகருக்குள்ளேயே விட்டு விட வேண்டுமாம்.. இந்த நாய்கள் ஒரு வேலை யாரையாவது கடித்தால் சாக மாட்டார்களாம். கடி பட்ட காயத்திற்கு மட்டும் சாதாரண சிகிச்சை பெற்றால் போதுமாம்.

    எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர், பிடித்து சிகிச்சை அளித்த நாய்களையும், அதன் தாய்களையும், பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் நகருக்குள் விடாமல் அருகாமையில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குள் விடுவது நல்லது. முன்னொரு காலத்தில் நகராட்சி, இவ்வாறு பிடிக்கும் நாய்கள் மொத்தத்தையும், படகுகளில் ஏற்றி எதேனும் தனி தீவுகளில் விட்டு வந்தார்கள் என்பதும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.
    2 hours ago · Unlike · 3
  • Fouz Ameen உங்க தகவலுக்கு நன்றி காக்கா
    2 hours ago · Unlike · 1
    • Hassan Ali தெருக்களில் குப்பை கூளங்கள் அதிகமாக கிடப்பதினால்தான் நாய்கள் கூட்டம் கூட்டமாக இரையை தேடிவருகிறது அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில்தான் நாய்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது தினமும் குப்பையை அகற்றினாலே போதும் நாய்களின் நடமாட்டம் குறைவும் அதுக்கு போய் குடும்ப கட்டுப்பாடுலாம் தேவையா

No comments:

Post a Comment