கீழக்கரை - இராமநாதபுரம் நெடுஞ்சாலையில்,
தேவிப் பட்டணத்திலிருந்து, கீழக்கரை பகுதிகளில் உள்ள கடைகளுக்கு, விற்பனை
செய்வதற்காக குளிர்பானம் ஏற்றி வந்த லாரி, நெடுஞ்சாலை டாஸ்மாக் கடையில்
இருந்து 200 மீட்டர் முன்னதாக உள்ள பாலையாறு அருகே வரும் போது, நண்பகல் 12.30 மணியளவில் கவிழ்ந்து
விபத்துக்குள்ளாகியது. இதனால் சில மணி நேரங்கள் வாகன போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.
இறைவன் அருளால் அதிர்ஷ்டவசமாக, வாகன ஓட்டுனர்
உட்பட யாருக்கும் எந்த பதிப்பும் இல்லை என தெரிய வருகிறது. இந்த
விபத்துக்கு காரணம் வாகன டயர் வெடித்ததால் ஏற்பட்டதாக சிலரும், நெடுஞ்சாலை டாஸ்மாக் கடையில் போதை ஏற்றிய ஒரு குடிமகன் குறுக்கே வந்ததால் ஏற்பட்டதாக வேறு சிலரும் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தினால் சாலையில் உடைந்து நொறுங்கிய குளிர் பான பாட்டில்களால், சாலையெங்கும் குளிர்பானம் ஆறாக ஓடியது அவ்வழியாக பயணித்த வாகன ஓட்டிகள் பலர், மீட்பு பணியில் ஈடுபட்டு உதவினர். இந்த விபத்து நடந்ததை அறிந்த கீழக்கரை காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீர்படுத்தினர்.
கீழக்கரை - இராமநாதபுரம் 'டாஸ்மாக்' நெடுஞ்சாலையில் கடந்த மாதம் நடை பெற்ற விபத்து குறித்த செய்திக்கு இங்கு சொடுக்கவும்.
No comments:
Post a Comment