தேடல் தொடங்கியதே..

Monday 12 March 2012

கீழக்கரையில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை ! - எங்கும் குளுமை !

நம் கீழக்கரை நகரில் நேற்று இரவு முதலே லேசான காற்றுடன் தூரலும் விழுந்தது. இன்று (12.03.2012) அதிகாலை முதல் அவ்வப்போது சாரல் மழைத் தொடர்ந்து பெய்து வருகிறது. கீழக்கரை மட்டுமல்லாது, திருப்புல்லாணி, இராமநாதபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்கள் முழுவதும் மழை மேகம் சூழ்ந்து காணப்படுகிறது. 





இது குறித்து கோக்கா  அஹமது தெருவைச் சேர்ந்த 'மஸ்தான்' என்கிற அஹமது இபுறாகீம் அவர்கள் கூறும் போது "கடந்த சில நாள்களாகவே, வெயிலின் கடுமையால், 'ஆரம்பமே அனலாய்த் தகித்த' நம் கீழக்கரை நகரம், இந்த திடீர் சாரல் மழையால் குளுமை அடைந்துள்ளது. 




அதே நேரம், இது போன்ற சிறு மழைகளில் நனைய நேரும் போது, ஜலதோஷம், குளிர் காய்ச்சல் போன்ற உபாதைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நாம் கவனமுடன் இந்த சாரல் மழையை எதிர் கொள்ள வேண்டும்" என்று அக்கறையுடன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment