தேடல் தொடங்கியதே..

Monday 12 March 2012

கீழக்கரையில் கிராம நிர்வாக அதிகாரிகள் அதிரடி மாற்றம் ! - புகார்கள் எதிரொலியா ?

கடந்த சில மாதங்களாகவே, கிராம நிர்வாக அதிகாரிகளின் மீது பல்வேறு விதமான புகார்கள் பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், சென்ற புதன் கிழமை (07.03.2012) அன்று இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் திரு. முத்துக்குமரன் அவர்கள், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அதிகாரிகள் 38 பேரை அதிரடியாக பணி இட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதில் கீழக்கரையில் பணியாற்றி வந்த கிராம நிர்வாக அலுவலர்களும் அடங்குவர்.

கிராம நிர்வாக அலுவலகம், கீழக்கரை

இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி


08.03.2012 அன்று நாளிதழில் வெளி வந்த செய்தி - நன்றி : தினத் தந்தி

இது குறித்து சின்னக் கடைத் தெருவைச் சேர்ந்த சுல்தான் செய்யது இபுறாகீம் அவர்கள் கூறும் போது, "இது போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கு, பொது மக்கள் சார்பாக என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். கீழக்கரை நகருக்கு, புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ள கிராம நிர்வாக அதிகாரிகள், பொது மக்களின் நன் மதிப்பைப் பெற்று சேவை ஆற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்", என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் தெரிவித்தார்.

2 comments:

  1. Balaiya should be transfer desert

    ReplyDelete
  2. Balaiya not a humanbeing he is one kind of animal he is Men- eater no words 2 describe him, many n lot poor people are affected him "Almaighity wil give soon punishment him

    ReplyDelete