தேடல் தொடங்கியதே..

Tuesday 13 March 2012

கீழக்கரையில் கிலோ கணக்கில் ' தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள்' பறிமுதல் - நகராட்சி ஆணையர் நடவடிக்கை !

நம் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், கீழக்கரை மற்றும் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 40 மைக்ரானுக்கு குறைவான பாலிதீன் பைகளை விற்கவும், பயன்படுத்தவும்  02.02.2012 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பெரும்பாலான கடைகளில் மாற்று ஏற்பாடாக, துணிப்பை மற்றும் பேப்பர் பைகளை பயன் படுத்தி வருகின்றனர்.


பறிமுதல் செய்யப்பட்ட பாலிதீன் பைகளின் ஒரு பகுதி
 ஆனால் ஒரு சில கடைகளில் மட்டும் இன்னும் தொடர்ந்து பாலிதீன் பைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இது குறித்து நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா அவர்களிடம், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் தொடர்ந்து புகார் செய்யப்பட்டது. அவரது உடனடி உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் முஜீபுர் ரஹ்மான் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் கீழக்கரை நகரில் நேற்று (12.03.2012) அனைத்து கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தினர்.


நன்றி : (படம்) கீழக்கரை டைம்ஸ்

இந்த அதிரடி சோதனையில், கடைகளில் விற்பனை செய்வதற்கு வைக்கப்பட்டு இருந்த தடை செய்யப்பட்ட 40 மைக்ரானுக்கும் குறைவான 227  கிலோ எடை உள்ள பாலிதீன் பைகளை பண்டல், பண்டலாக கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இது போன்ற பறிமுதல் நடவடிக்கைகள் தொடரும் என்று நகராட்சி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment