தேடல் தொடங்கியதே..

Thursday 3 May 2012

கீழக்கரையில் இன்னும் தீராத 'குப்பை கிடங்கு' பிரச்சனை - தில்லையேந்தல் பகுதி பொது மக்கள் மீண்டும் எதிர்ப்பு !

தில்லையேந்தல் ஊராட்சியில், கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான 12 ஏக்கரில் குப்பைக்கிடங்கு  கட்டும் பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. கீழக்கரை நகரின் முக்கியப் பிரச்சனையாக அனைத்து தரப்பினராலும் எதிர் கொள்ளப்பட்டிருக்கும், குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, இந்த குப்பை கிடங்கு அமையும் என கீழக்கரை பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் மிகுத்த எதிர்பார்ப்புடன் எதிர் நோக்கி இருந்தனர். 


 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குப்பை கிடங்கின் கட்டுமானப் பொருட்களுக்கு சிலர் தீ வைத்தனர். இதையடுத்து கீழக்கரை போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் இளங்கோவன் முன்னிலையில், கீழக்கரை நகராட்சி கமிஷனர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில், கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
 

 இதில் நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, துணை தலைவர் ஹாஜா முகைதீன், அ.தி.மு.க., செயலாளர் ராஜேந்திரன், திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க., துணை செயலாளர் செல்வக்குமார், தில்லையேந்தல் ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம், கீழக்கரை கவுன்சிலர்கள் மற்றும் கீழக்கரை பொது நல அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். 


இந்த கூட்டத்தில் கீழக்கரை நகராட்சி கமிஷனர் முஜிபுர் ரஹ்மான் பேசும் போது "குப்பைகள் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுவதால் தில்லையேந்தல் பகுதி பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. அவர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் விரைவில் பரிசீலனை செய்யப்பட்டு சுமூக தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என கமிஷனர் விளக்கினார். 


 இதில் உடன்பாடு ஏற்படாத தில்லையேந்தல் பகுதி கிராமங்களின் முக்கியஸ்தர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள், கலெக்டரிடம் முறையிடப்போவதாக தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு மக்களின் சுகாதார மேம்பாடுகளை கருத்தில் கொண்டு, எந்த ஒரு சாராரும் பாதிக்கப்படா வண்ணம் திட்டப் பணிகள் முடிக்கப்பட ஆவன செய்ய வேண்டும் என்பது இரு தரப்பினரின் வாதமும், கருத்துக்களும் .....

No comments:

Post a Comment