தேடல் தொடங்கியதே..

Wednesday 2 May 2012

கீழக்கரையில் 'உண்ணாவிரதப் போராட்டம்' - கவுன்சிலர்கள் பேட்டி !

கீழக்கரையில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி, பத்து கவுன்சிலர்களால் அறிவிக்கப்பட்டிருந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று (02.05.2012) காலை பத்து மணியளவில் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகில் (வெங்கடேஸ்வரா திருமண மஹால் முன்பு) துவங்கியது.






உண்ணாவிரதப் பந்தலில், கூடியிருந்த மக்கள் முன்னிலையில் சன் தொலைக் காட்சி செய்திகள் உட்பட பல்வேறு மீடியாக்களுக்கு கவுன்சிலர்கள் ஜெயப்பிரகாஷ், முகைதீன் இபுறாகீம், ஹாஜா நஜிமுதீன் (இடி-மின்னல்) ஆகியோர் பேட்டியளித்தனர். மேலும் இந்த போராட்டத்தில்  கவுன்சிலர்கள் அன்வர் அலி, தங்கராஜ், சாகுல்ஹமீது, அரூசியா பேகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







இது குறித்து கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ் அவர்கள் கூறுகையில் "மக்கள் நலனை முன்னிறுத்தி, ஜனநாயக முறையில் நடை பெற்று வரும் எங்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நிச்சயம் எங்கள் போராட்டத்தின் எதிரொலி விரைவில் நகராட்சியில் பலமாய் ஒலிக்கும். தொடர்ந்து ஆதரவு தரும் பொது மக்கள் அனைவருக்கும் எங்கள் போராட்டக் குழு சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று நம்பிக்கையடன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment