தேடல் தொடங்கியதே..

Thursday 1 August 2013

கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் 'தினமலர்' நாளிதழ் நடத்தும் திறனாய்வுப் போட்டிகள் - நூற்றுக் கணக்கான மாணவ, மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்பு !

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 'தினமலர்' நாளிதழ் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் இன்று (01.08.2013) காலை 10 மணி முதல் நடை பெற்று வருகிறது. 




இதில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, கண்ணாடியில் வரைதல் போட்டி உள்ளிட்ட திறனாய்வு போட்டிகள் சிறப்பாக நடை பெறுகிறது. இதில் இஸ்லாமியா பள்ளியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் மிகுந்த உறசாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.








குறிப்பாக ஓவியப் போட்டியில் 513 மாணவ மாணவிகளும், ஏனைய போட்டிகளில் 200 க்கும் மேற்பட்ட மாணாக்கர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை இஸ்லாமியா பள்ளியின் தாளாளர். M.M.K.முஹைதீன் இபுறாஹீம் அவர்கள் சிறந்த முறையில் செய்திருந்தார். போட்டிகளின் முடிவுகள் எதிர் வரும் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, அன்றைய தினமே பரிசுகள் வழங்கப்படும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment