தேடல் தொடங்கியதே..

Saturday 3 August 2013

துபாயில் 'ஈமான்' அமைப்பு நடத்தும் புனித லைலத்துல் கத்ரு சிறப்பு நிகழ்ச்சி - அனைவரும் பங்கேற்க அழைப்பு !

துபாய் ஈமான் அமைப்பு சார்பாக நடத்தப்படும் புனித லைலத்துல் கத்ரு சிறப்பு நிகழ்ச்சி ஹிஜ்ரி 1434 ரமழான் பிறை 27 ( 04.08.2013 ) ஞாயிற்றுக்கிழமை இரவு 10.45 மணிக்கு தராவீஹ் தொழுகைக்குப் பின் 'தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில்' ( குவைத் பள்ளி ) நடைபெற இருக்கிறது என பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 


இந்த நிகழ்ச்சியில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி 10.45 மணிக்கு நடைபெறும். சொற்பொழிவுக்குப் பின் வழக்கம் போல் தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள் இரவு 12.00 மணிக்கு நடைபெறும். இரவு 1 மணிக்குள் நிகழ்ச்சி நிறைவு பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளியின் மேல்தளத்தில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கலந்து இப்புனித இரவின் நற்பயனை அடைய அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு: அனைவருக்கும் ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு 050 51 96 433 / 050 475 30 52 / 050 658 9305 / 055 800 79 09 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
 
தகவல் :முதுவை ஹிதாயத் அவர்கள் 

No comments:

Post a Comment