தேடல் தொடங்கியதே..

Friday 20 September 2013

கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு !

கீழக்கரை நடுத் தெரு ஜும்மாப் பள்ளி  ஜமாத்தை சேர்ந்த நடுத்தெரு மர்ஹூம். ஜனாப்.  A.M.M முஹம்மது அப்துல் காதர் அவர்கள் மனைவியும், செய்யது சீனி பரிதா, செய்யது சாகுல் ஹமீது, தாஜுன் ரசீதா, முஹம்மது இபுறாகீம், ஆயிசத்து ஜெசீலா, நெய்னா முகம்மது ரபீக்கா, ஜாகீர் ஹுசைன் ஆகியோர்களின் தாயாரும்,

இஞ்ஜினியர் அப்துல் கபூர், டாக்டர். கியாதுதீன், ஜாபர் இபுறாகீம் (ஆனா சீனா), அஹமது அஸ்ரப், பவுசுல் அமீன் ஆகியோர்களின் மாமியுமான 'மூனிச்சிமா ராத்தா' என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும்  ஜனாபா. A.M.S. சேகு உம்மா நாச்சி உம்மா அவர்கள் இன்று (20.09.2013) அதிகாலை சென்னையில் வபாத்தாகி விட்டார்கள்.


 (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).

அன்னாரின்  ஜனாஸா நல்லடக்கம் நடுத்தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நடை பெறும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மர்ஹூமா. சேகு உம்மா நாச்சி உம்மா அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு : ஜாகீர் ஹுசைன் -  9840689316

1 comment:

  1. கீழக்கரை அலி பாடசா20 September 2013 at 19:12

    அஸ்ஸலாமு அலைக்கும். வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

    வார்த்தை எதுவுமே இல்லை கண்ணீரைத் தவிர.

    அன்னாரின் மஃபிரத்துக்கும், ரஹ்மானின் கருணையினால் ஜன்னத் பிர்தவுஸில் நற்பதவி கிடைக்கவும்,கண்மணி செய்யதினா ரசூலே கரீம் ஸல்லாஹு அலைஹி வ ஸல்லத்தின் ஷபாத் கிடைக்கவும் நீராடும் கண்களோடும் விம்மும் நெஞ்சத்தோடும் இரு கரம் ஏந்தி ஏக இறைவனிடத்தில் இறைஞ்சுகின்றோம், மன்றாடுகிறோம்.ஆமீன்

    இந்த அன்பு சகோதரரை இழந்து ஆறா துயர் உற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் அனைத்து தரபினக்கும் ஸப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை வல்ல அல்லாஹு சுபுஹானவுத்தாலா அள்ளி அள்ளி வழங்க உள்ளம் உருக பிரார்த்திக்கின்றோம் ..மன்றாடுகிறோம்.ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.

    ReplyDelete