தேடல் தொடங்கியதே..

Monday 9 July 2012

நகராட்சி ஆணையர், சார் பதிவாளர் உள்ளிட்ட 3631 பணியிடங்களுக்கான 'குரூப் 2 தேர்வு' - விண்ணப்பிக்க 13.07.2012 கடைசி நாள் !

TNPSC குரூப் 2 தேர்வின், முதற்கட்ட தேர்வு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு (ஒருங்கிணைந்த சார்பு நிலைப் பணி - CSSE I) மூலம் மொத்தம் 3 ஆயிரத்து 631 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக வரும் ஜூலை மாதம் 13ம் தேதி (வெள்ளிக் கிழமை) வரை டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



நகராட்சி ஆணையர், சார்பதிவாளர், உதவிப் பிரிவு அலுவலர்கள், இள நிலை வேலை வாய்ப்பு அலுவலர்கள், தணிக்கை ஆய்வர், கூட்டுறவு சங்கங்களின் முது நிலை ஆய்வர், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட உயர்  பதவிகளுக்கான 3631 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இதற்கு கல்வித் தகுதியாக, ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சார்பதிவாளர் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 20 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.


TNPSC தேர்வுக்கான அட்டவணையுடன் திரு நடராஜன் IPS

மேலும் இது குறித்த முழு விபரங்களுக்கு கீழ் காணும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

                                    அதிகாரப்பூர்வ இனைய தள முகவரி
                                            http://www.tnpsc.gov.in/latest-notification.html                 

தேர்வுக்கு விண்ணப்பிக்க பின் வரும்  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இனைய தள முகவரியை சொடுக்கி விண்ணப்பிக்கலாம்.

                                         தேர்வுக்கு விண்ணப்பிக்க
                                                   http://tnpscexams.net/

நம் கீழக்கரையை சார்ந்த TNPSC குரூப் 2 தேர்வுக்கு முயற்சிக்கும் தேர்வாளர்கள் அனைவரும், உடனடியாக, இப்போதே ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த செய்தியை வாசிக்கும் அன்பாளர்கள் அனைவரும், தேர்வுக்கு முயற்சிக்கும் பலருக்கும் சென்றடைய ஏதுவாக, நம் நண்பர்கள் அனைவருக்கும் இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment