தேடல் தொடங்கியதே..

Saturday 14 July 2012

கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக இஞ்சினீயர் ஆசாத் பதவியேற்பு - சிறப்பான நலத் திட்டங்கள் அறிவிப்பு !

கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, நேற்று முன் தினம் உசைனியா மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.  இந்த விழாவில் கடந்த ஆண்டின் தலைவர் செய்யது இபுராகிம் தலைமை வகித்தார். மாவட்ட ஆளுநர் ஜெசிய வில்லவராயர், மாவட்ட ரோட்டரி துணை ஆளுநர் சின்னத்துரை அப்துல்லா, கீழக்கரை ரோட்டரி பட்டயத் தலைவர். முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர். அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




புதிய தலைவராக இஞ்சினீயர் ஆசாத் ஹமீது மற்றும் செயலாளராக சுப்பிரமணியன் ஆகியோருக்கு மாவட்ட ரோட்டரி ஆளுநர் ஜெசிய வில்லவராயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  'ஆல் இந்தியா ரேடியோ  - மதுரை கோடை பண்பலை புகழ்' திரு. சவித்ரா ராஜாராம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.




இந்த நல்ல நிகழ்ச்சியில், பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு நலத் திட்டங்கள் செயலாக்கம் பெற்றது. குறிப்பாக கீழக்கரை - இராமநாதபுரம் சாலை வண்ணாந்துறை வளைவில் ஒளிரும் எச்சரிக்கை பலகைகள் அர்ப்பணித்தல், நகரின் அனைத்து வீடுகளின் வாசல்களிலும், கதவு எண், மின்சார இணைப்பு மற்றும் கேஸ் இணைப்பு எண்களை குறிப்பிடும் விதமான ஸ்டிக்கர்கள் வழங்குதல், இலவச தையல் இயந்திரம் வழங்குதல் மட்டுமல்லாது, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.




நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ரோட்டரி சங்க பட்டய தலைவர் திரு. ரவிசந்திர ராமவன்னி உட்பட கீழக்கரை சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ரோட்டரி பட்டய செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஜனாப்.இஞ்சினீயர் ஆசாத் ஹமீது அவர்களின் தலைமையிலான கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் பணிகள் மென் மேலும் சிறக்க, கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம.

No comments:

Post a Comment