தேடல் தொடங்கியதே..

Sunday 2 September 2012

கீழக்கரையில் நாளை (03.09.2012) மின்சார விநியோகம் இருக்காது - முன்னேற்பாடுகள் அவசியம் !

கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால், கீழக்கரை நகர், ஏர்வாடி, முஹம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், காஞ்சிரங்குடி, உத்தரகோசமங்கை, களரி, எக்ககுடி, தேரிருவேலி மற்றும் அதனைச் சார்ந்த, சுற்று வட்டார பகுதிகளில் நாளை திங்கள்கிழமை (03.09.2012) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று இராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.




ஆகவே நம் பகுதி பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம். தாங்கள் வாசிக்கும் இந்த தகவலை, நம் நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் தெரிவிக்கும் படியும் கேட்டுக் கொள்கிறோம்.

2 comments:

  1. Ahamed Aslam ( From Bangkok ) : இதனை ஏன் மக்களுக்கு அறிவிக்கனும். அவசியம் இல்லை. ஏனெனில் நம்ம ஊரு மக்களுக்கு கடந்த ஒரு வருடமாக இது பழகி விட்டது... ஆக மொத்தத்தில் ஊரிலும் POWER இல்லை. நம்ம தொகுதி வேட்பாளரிடமும் POWER இல்லை... "பாவம் நம்ம மக்கள் " ...

    ReplyDelete
  2. இதனை ஏன் மக்களுக்கு அறிவிக்கனும். அவசியம் இல்லை. ஏனெனில் நம்ம மக்களுக்கு கடந்த ஒரு வருடமாக பழகி விட்டது... ஆக மொத்தத்தில் ஊரிலும் POWER இல்லை. நம்ம தொகுதி வேட்பாளரிடமும் POWER இல்லை... "பாவம் நம்ம மக்கள் " ...

    ReplyDelete