தேடல் தொடங்கியதே..

Wednesday 5 September 2012

தபால் துறையில் 621 காலி பணியிடங்கள் - கீழக்கரை பகுதி ஆர்வமுடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டுகோள் !

தபால் துறையில் போஸ்டல் அசிஸ்டென்ட், சார்டிங் அசிஸ்டென்ட், போஸ்டல் அசிஸ்டென்ட் (ரிட்டர்னிங் லெட்டர் ஆபீஸ்), போஸ்டல் அசிஸ்டென்ட் (மெயில் மோட்டார் சர்வீஸ்), போஸ்டல் அசிஸ்டென்ட் (பாரின் போஸ்ட் ஆர்கனைசேஷன்), போஸ்டல் அசிஸ்டென்ட் (எஸ்.பி.சி.ஒ) ஆகிய பிரிவுகளில் மொத்தம் 621 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க வரும் அக்டோபர் 1 ஆம்  தேதி கடைசி நாளாகும். வயதுவரம்பு 18 வயதிலிருந்து 27 வயது வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எஸ்.சி, எஸ்.டி பிரிவுக்கு 5 ஆண்டுகள் வரையும், இதர பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கு 3 ஆண்டுகள் வரையும் வயது வரம்பில் சலுகை உண்டு. 


12 ஆம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண் தேர்ச்சியோடு, ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கணிணியில் தட்டச்சு செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். 10, 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண், எழுத்து தேர்வு மதிப்பெண், கம்ப்யூட்டர் டைப்பிங் டெஸ்ட் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்ப படிவ கட்டணம் ரூ.50. விண்ணப்பங்கள் வினியோகம் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை நடைபெறும். 

இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.200. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்க வரும் அக்டோபர் 1ம் தேதி கடைசிநாள் ஆகும். தேர்வர்கள் இது தொடர்பான மேலும் விவரங்களை  www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘டைரக்ட் ரெக்ரூட்மென்ட் செல், நியூடெல்லி எச்ஒ, நியூடெல்லி 110001' என்ற முகவரிக்கு விரைவு தபால் அல்லது பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இந்த நல்ல வாய்ப்பினை கீழக்கரை பகுதியை சேர்ந்த ஆர்வமுடையவர்கள், பயன்படுத்தி கொள்ளுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment