தேடல் தொடங்கியதே..

Sunday 29 September 2013

கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளியை பழமை மாறாமல் புனரமைக்க ஜமாத் நிர்வாகிகள் ஆலோசனை !

கீழக்கரையில் பழமை வாய்ந்த தொழுகைப் பள்ளிகளுள் நடுத்தெரு ஜும்மா பள்ளியும் ஒன்றாகும். கீழக்கரை நகரின் நடு நாயகமாக திகழும் இந்த கலை நயமிக்க கல் பள்ளியில் அழகும், கம்பீரமும் நிறைந்த, பூ வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் பிரதானமாக காணப்படுகிறது. நூற்றாண்டுகளை தாண்டி நிற்கும் இந்த பள்ளியின் பல தூண்களில், தற்போது அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் முகப்பில் இருக்கும் மினராக்களில் வெடிப்புகளும் தென்படுகிறது.


இதனால் நமக்கு கிடைத்த அரிய பொக்கிசமான இந்த பள்ளியை, மிக விரைவில் பழமை மாறாமல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள, ஜமாத் நிர்வாகிகள் இடையேயான ஆலோசனை மற்றும் கலந்தாய்வு  நிகழ்ச்சி இன்று (29.09.2013) மாலை அஷர் தொழுகைக்குப் பின்னர், ஜும்மா பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. இதில் தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் ராஜா முஹம்மது அவர்கள் (சென்னை அருங்காட்சியகத்தின் முன்னாள் துணை இயக்குனர்) கலந்து கொண்டு,புனரமைப்பு செய்வது சம்பந்தமான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 




இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடுத் தெரு ஜும்மா பள்ளி மஹல்லியும், கீழக்கரை டவுன் காஜியுமான காஜி. A.M.M.காதர் பக்ஸ் ஹுசைன் சித்தீகி, ஜமாஅத் செயலாளர் ஹபீப் தம்பி, பொருளாளர் ஜமால் யூசுப், முன்னாள் செயலாளர் காதர் செய்யது இபுறாஹீம், ஜமாஅத் அங்கத்தினர்கள் ஜாபர் இபுறாகீம் (ஆனா சீனா), சிராங்கூன் டிராவல்ஸ் ஜுபைர் ஆகியோர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

FACE BOOK COMMENTS :


  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' அவசியம் செய்ய வேண்டிய நல்ல முயற்சி. இந்த தொன்மையான பள்ளியை, எந்த பாதிப்புகளும் இல்லாமல் பாதுகாத்து அடுத்த தலை முறையினரிடம் ஒப்படைக்க வேண்டிய கடப்பாடு ஜமாஅத்தினருக்கு உண்டு. இப்போது இருக்கும் பள்ளியின் அருமையான நிர்வாகத்தினர் சிறு சிறு குறைபாடுகளையும் உடனுக்குடன் கவனித்து சீர் செய்து வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ். 

    இன்று பள்ளியை புனரமைக்க முதல் அடி எடுத்து வைத்திருக்கும் ஜமாஅத் நிர்வாகத்தினருக்கு பொறுமையையும், பொருளாதாரத்தையும் வல்ல நாயன் அல்லாஹ்.. அளவின்றி வழங்கி நல்லருள் பாலிப்பானாக. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
  • Nihal Iqbal முயற்ச்சிகள் மேம்பட வாழ்த்துக்கள்.. அல்லாஹ் நன்மையாக்கி தர துஆ செய்வோம்
    20 hours ago · Like · 1
  • 1 comment:

    1. ஜமாஅத் மக்களின் பணத்தை தேவை இல்லாமல் வீண் அடிக்க கூடாது ,
      பணம் அதிகமாக இருந்தால் ஜமாஅத் ஏழை மக்களுக்கு வட்டி இல்லா கடன் உதவி செய்யலாம் , பள்ளிக்கு அதிகமான வருமானம் தர கூடிய திட்டத்தினை வகுக்கலாம் ,

      ReplyDelete