தேடல் தொடங்கியதே..

Monday 30 September 2013

கீழக்கரையில் விஷப் பாம்புகள் அட்டூழியம் - கடும் பீதியில் உறைந்திருக்கும் பொதுமக்கள் !

கீழக்கரையில் புதுக் கிழக்குத் தெரு, மேலத் தெரு, ஆறு பங்களா பகுதிகளில் கருநாகம், நல்ல பாம்பு, சாரைப்பாம்பு போன்ற பல வகையான விஷ பாம்புகள் குவியல், குவியலாக இரவு நேரங்களில் 'ஹாயாக' சாலைகளில் நெளிந்து செல்கின்றன. சுமார் 7 அடி நீளம் கொண்ட இந்த பாம்புகள் பல நேரம் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், வலம் வந்து விடுகிறது. இதனால் இப்பகுதிகளில் வசிக்கும்  பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், சிறுவர்கள் அலறி அடித்துக் கொண்டு அக்கம் பக்கத்தினரை, உதவிக்கு அழைப்பது அன்றாட நிகழ்வாகி வருகிறது.



கீழக்கரையின் குறுகிய தெருக்களுக்குள் வசிப்பதை விட்டு விலகி, காற்றோட்டமாக, சுகாதாரமாக வாழும் எண்ணத்தில் புற நகர் பகுதிகளில் இல்லங்களை அமைத்து வரும் கீழக்கரை வாசிகளுக்கு, இந்த பாம்புகளின் படையெடுப்பு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த சில நாள்களுக்கு முன்பு கீழக்கரையில் பாம்புக் கடித்ததால் ஒரு சிறுவன் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளதாக தெரிகிறது.



பட்டாணி அப்பா சாலை, பெரிய காடு, முஹம்மது காசீம் அப்பா, 500 பிளாட் உள்ளிட்ட பகுதிகளுக்கு, இரவு நேரங்களில் நடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்பட்டு வருகின்றனர். இந்த பகுதிகளில், பல இடங்களில் நகராட்சி நிர்வாகத்தால் தெரு விளக்குகள் நிறுவப்படாததால் இரவு 7 மணிக்கெல்லாம் கும்மிருட்டு சூழ்ந்து விடுகிறது. இந்த வேளைகளில் பாம்புகளின் அட்டூழியமும் பெருகியுள்ளதால் பொதுமக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். 

இது குறித்து வனத்துறையிடம் புகார் தெரிவிப்பதும், அவர்களும் தொடர்ச்சியாக  பாம்புகளை பிடித்து சென்று வனப் பகுதிகளில் விடுவதும் வாடிக்கையாகி வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் அடைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, குடியிருப்பை சுற்றிலும் உள்ள காலியிடங்களில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் காணப்படுவது தான். இங்கிருந்து வெளியேறும் பாம்புகள் தான் குடியிருப்பில் புகுந்து விடுகின்றன. எனவே  நகர் பகுதிகளில் வசிப்போர்கள் சுற்றுப் புறத்தில் புதர் மண்டிக் கிடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


வீட்டில் யாரையேனும் பாம்பு கடித்து விட்டால் உடனடியாக செய்ய வேண்டியவை : 

பாம்பு கடித்துவிட்டால்,பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலான தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும்.

கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா..? இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல...

கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா.? கடித்த இடம் சற்று தடித்து(வீங்கி) காணப்படுகிறதா..?? கடுமையான வலி இருக்கிறதா..?இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும். 

முதலுதவி:-

இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப் போடுவது நல்லது.

காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.

பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும் போது தான் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது

இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம் 

பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும். 

இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் பாம்புகை அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத் தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.

பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்...

நம் அனைவரையும் இறைவன் பாதுகாப்பானாக.. ஆமீன் 

படங்கள் : A.S டிரேடர்ஸ் கபார் கான்


FACE BOOK COMMENTS :

  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வசிப்பவர்களுக்கு இது ஒன்றும் புதிய செய்தி அல்ல. வாரம் ஒரு பாம்பு, இரண்டு தேள், ஒரு நட்வாக் கொல்லி, சில பல பூரான் வகைகள் போன்றவற்றை வீட்டின் முற்றத்தில் பார்த்து பார்த்து பழகிப் போன ஒன்று. 


    என்ன.. ஒரு விசேசம் இன்னும் கடி வாங்கவில்லை. கடித்து விட்டால்...? இளையவனின் பதிவை படித்து முதலுதவி முறைகளை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதாக படுகிறது.
    15 hours ago · Like · 5
  • Keelakarai Ali Batcha தன்னுடைய தன்னலம் அற்ற சேவையாலும், தொடர் முயற்சியாலும் கீழக்கரை வாழ் நன் மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்ப்பது மட்டும் அல்லாது அதற்கான பரிகாரம், கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அனைவரும் அறியும் வண்ணம் எளிய நடையில் கொண்டு செல்லுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே. இது முகஸ்துதி அல்ல.உண்மையின் வெளிப்பாடு. தம்பி கீனா வானா நீவீர் மேன்மேலும் வள்ர எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு.


    சமீப காலங்களில் பாம்பு பிரச்சனை விஷ்வரூபம் எடுத்து வருகிறது.சமீபத்தில் ஒரு இளம் பாலகனை இழந்தது வேதனைகுரியது.பாம்பு கடிக்கு உடனடி வைத்திய உதவிக்கு தனியார் மருத்துவமனைக்கு செல்லக் கூடாது என்பது முற்றிலும் சரியான எச்சரிக்கையே. அதே நேரத்தில் நமதூர் அரசு மருத்துவமனையில் விஷ பாம்பு கடிக்கு தடுப்பு மருந்து இருப்பு உள்ளதா என்பதையும் சமூக ஆர்வலர்கள் கண்கானிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் நமது தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் சகோதரர் ஜவாஹிருல்லா அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டுச் சென்று இருப்பு இருக்க வழி காண வேண்டும்.மருத்துவர் இல்லாத் பட்சத்தில் (குறிப்பாக இரவு நேரத்தில் தலமை செவிலியர் தடுப்பு ஊசி போட அனுமதிக்க வேண்டும்.”ரெட் டேப்” இது விஷயத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது.

    இது போன்ற துர்மரணங்களிலிருந்து அனவரையும் காக்க படைத்தவனிடம் துவா செய்வோமாக. ஆமீன்.
    14 hours ago · Like · 2
  • 2 comments:

    1. கீழக்கரை அலி பாட்சா30 September 2013 at 19:38

      தன்னுடைய தன்னலம் அற்ற சேவையாலும், தொடர் முயற்சியாலும் கீழக்கரை வாழ் நன் மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்ப்பது மட்டும் அல்லாது அதற்கான பரிகாரம், கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அனைவரும் அறியும் வண்ணம் எளிய நடையில் கொண்டு செல்லுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே. இது முகஸ்துதி அல்ல.உண்மையின் வெளிப்பாடு. தம்பி கீனா வானா நீவீர் மேன்மேலும் வள்ர எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு.

      சமீப காலங்களில் பாம்பு பிரச்சனை விஷ்வரூபம் எடுத்து வருகிறது.சமீபத்தில் ஒரு இளம் பாலகனை இழந்தது வேதனைகுரியது.பாம்பு கடிக்கு உடனடி வைத்திய உதவிக்கு தனியார் மருத்துவமனைக்கு செல்லக் கூடாது என்பது முற்றிலும் சரியான எச்சரிக்கையே. அதே நேரத்தில் நமதூர் அரசு மருத்துவமனையில் விஷ பாம்பு கடிக்கு தடுப்பு மருந்து இருப்பு உள்ளதா என்பதையும் சமூக ஆர்வலர்கள் கண்கானிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் நமது தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் சகோதரர் ஜவாஹிருல்லா அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டுச் சென்று இருப்பு இருக்க வழி காண வேண்டும்.மருத்துவர் இல்லாத் பட்சத்தில் (குறிப்பாக இரவு நேரத்தில் தலமை செவிலியர் தடுப்பு ஊசி போட அனுமதிக்க வேண்டும்.”ரெட் டேப்” இது விஷயத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது.

      இது போன்ற துர்மரணங்களிலிருந்து அனவரையும் காக்க படைத்தவனிடம் துவா செய்வோமாக. ஆமீன்.

      ReplyDelete
    2. கீழகரைல் விஷ பாம்புகளின் எண்ணிக்கைகள் அதிகமாக இருப்பதால் , அரசாங்கம் கீழகரை அரசு மருத்துவமனை இல் பாம்பு கடி 24 மணி நேரம் சிக்கிச்சை பிரிவு திறக்க வேண்டும் ,அப்பொழுதுதான் உயிர் இழப்பு இன்றி மக்களை காப்பாற்ற முடியும் ,

      ReplyDelete