தேடல் தொடங்கியதே..

Tuesday 4 June 2013

கீழக்கரையில் இலேசான சாரல் மழையுடன் வீசும் குளிர் காற்று !

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு மலைத் தொடரை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தற்போது கன மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. 



இந்நிலையில் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று 6 மாலை மணி முதல் குளிர்ந்த காற்று வீசியது. அதனைத் தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் சாரல் மழை பெய்தது. கடந்த 3 மாதங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கீழக்கரை நகர் எங்கும் குளுமையான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment