தேடல் தொடங்கியதே..

Thursday 6 June 2013

கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு !

கீழக்கரை மேலத் தெரு புதுப் பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த கீழக்கரையின் முன்னாள் சேர்மன் முஹம்மது சதக் தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம். S.M.ஜலாலுதீன், மர்ஹூம்.S.M.கபீர், மர்ஹூம்.S.Mதஸ்தகீர் மற்றும் முஹம்மது சதக் அறக்கட்டளையின் செயலாளர் S.M.யூசுப் சாஹிப் ஆகியோர்களின் சகோதரருமான, 'சேனா மூனா ஹமீது காக்கா' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'எஸ்.எம். ஹமீது அப்துல் காதர்' அவர்கள் இன்று (06.06.2013) வியாழக்கிழமை  மாலை 6.48  மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். 


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். 

கீழக்கரை நகர மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அரும் பாடுபட்ட கல்வி தந்தையாகவும், மூத்த கல்வியாளராகவும், கீழக்கரையின் பல்வேறு முன்னேற்ற திட்டங்களுக்கு அடிகோலிய சமூக ஆர்வலராகவும் திகழ்ந்தார்கள்.

மேலும் முஹம்மது சதக் அறக்கட்டளை நிறுவனரான இவர்கள்,  முஹம்மது சதக் கல்வி நிறுவனங்களின் தலைவராகவும், கீழக்கரை அனைத்து ஜமாத்துகளின் கூட்டமைப்பான 'கீழக்கரை குத்பா கமிட்டி' யின் தலைவராகவும் அங்கம் வகித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் 08.06.20013 சனிக்கிழமை அன்று காலை 10 மணியளவில், சென்னை இராயப்பேட்டை மையவாடியில் நடை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.ஹமீது அப்துல் காதர் அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment