தேடல் தொடங்கியதே..

Wednesday 25 September 2013

கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடை பெற்ற N.S.S தின விழா!

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில், மாநில தொழில் நுட்ப இயக்குனரகம் சார்பில், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான மண்டல அளவிலான N.S.S தின நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா அவர்கள் தலைமை தாங்கினார். சென்னை முஹம்மது சதக் மருத்துவக் கல்லூரி இயக்குனர் ஹமீது இபுராகிம் அவர்கள் முன்னிலை வகித்தார்.

பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் அலாவுதீன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர். பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சேவைகள் குறித்து உரை நிகழ்த்தினார். ஆளுமை வளர்ச்சி,தலைமை பண்புகள் குறித்து நெல்லை மனிதவள ஆராய்ச்சி மேம்பாட்டு மைய நிறுவன இயக்குனர் எஸ்.மணியன் அவர்கள் உரையாற்றினார்.  

வேலை வாய்ப்பு திறன் குறித்து மைக்ரோ சிறு மற்றும் நடுத்தர வளர்ச்சி நிறுவன அலுவலர் தூத்துக்குடி ஜெயசெல்வம் அவர்கள் பேசினார். இந்த நிகழ்ச்சியில் முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர், செய்யது ஹமீதா கலைக்கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி, முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி இயக்குநர் ஹூசைன் ஜலால் ஆகியோர்கள் பங்கேற்றனர்.



இந்த நிகழ்ச்சியின் போது மண்டல அளவில் 20 பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த 100க்கும் அதிகமான மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். தனித்திறன் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி நிறைவில் திட்ட அலுவலர் வேல்முருகன் நன்றி கூறினார்.

படங்கள் : பாலாஜி கணேஷ்

No comments:

Post a Comment