தேடல் தொடங்கியதே..

Thursday 10 October 2013

கீழக்கரையில் இந்த வருடம் கூட்டுக் குர்பானியில் 'ஒட்டகங்கள் இல்லை' - ஆடு, மாடுகள் மட்டுமே குர்பானி கொடுக்கப்படுகிறது !

கீழக்கரையில் ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி, இஸ்லாமிய சட்டப்படி குர்பானி கொடுப்பதற்காக, கீழக்கரை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,சார்பில் இராஜஸ்தானிலிருந்து ஒட்டகங்கள் வரவழைக்கப்படும். இதே போன்று கீழக்கரையில் பக்ரீத் பண்டிகையையொட்டி பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர்களும், இஸ்லாமிய பெருமக்களும் மூன்று நாட்களுக்கு ஒட்டகம், மாடு, ஆடுகள் குர்பானி கொடுத்து அதன் இறைச்சிகளை, இறை வழியில் முஸ்லீம்களுக்கும், உறவினர்களுக்கும், ஏழை எளியோர்களுக்கும்  வழங்கி மகிழ்வர்.











படங்கள்: கடந்த வருடம் TNTJ சார்பாக வரவழைக்கப்பட்ட குர்பானி ஒட்டகங்கள் 

அதே போல் இந்த ஆண்டும், ஒட்டகங்கள் வரவழைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இது வரையில் எந்த அமைப்பினரும் ஒட்டகங்களை கொண்டு வரவில்லை.இது குறித்து சம்பந்தப்பட்ட அமைப்பினர்களிடம் விசாரித்ததில்,வெகு தொலைவில் இருந்து ஒட்டகங்களை கீழக்கரைக்கு கொண்டு வருவதிலும், அதனை பராமரிப்பதிலும் பெரும் சிரமம் ஏற்படுவதால்,இந்த வருடம் ஒட்டகங்கள் வரவழைக்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

இராமநாதபுரத்தில் மட்டும் த.மு.மு.க வினர் சார்பில் குர்பானி கொடுக்க ஒட்டகம் வரவழைக்கப்பட்டுள்ளது.அதே வேளையில் கீழக்கரையில் பல்வேறு சமுதாய அமைப்பினர்கள் கூட்டுக் குர்பானி திட்டத்தை செயல்படுத்துகின்றனர். இந்நிலையில் TNTJ, KECT, TMMK உள்ளிட்ட சமுதாய அமைப்புகளின் கூட்டுக் குர்பானி குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை, கீழக்கரை நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. கூட்டு குர்பானி குறித்த பொதுமக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்களும் வழங்கப்படுகிறது.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) அறிவிப்பு :













கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) அறிவிப்பு :


தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (TMMK) அறிவிப்பு :


No comments:

Post a Comment