தேடல் தொடங்கியதே..

Monday 7 October 2013

கீழக்கரையில் 'புனித ஹஜ்' பெருநாள் அறிவிப்பு !

கீழக்கரை பகுதியில் இஸ்லாமிய பெருமக்களால் மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கப்படும்   இந்த வருடத்தின் (ஹிஜ்ரி 1434) தியாகத் திருநாளாம், 'புனித ஹஜ்' பெருநாள் குறித்த அறிவிப்பினை கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளி மஹல்லியும், கீழக்கரை டவுன் காஜியுமான காஜி. A.M.M.காதர் பக்ஸ் ஹுசைன் சித்தீகி அவர்கள் வெளியிட்டுள்ளார். 


அன்பிற்கினிய கீழக்கரை வாழ் இஸ்லாமிய பெரு மக்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதஹூ. 

கடந்த 06.10.2013 ஞாயிற்றுகிழமை பின்னேரம் திங்கள் இரவு, தமிழகத்தில் துல்ஹஜ் தலைப்பிறை தென்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்).

எனவே தமிழக தலைமை காஜியின் அறிவிப்பின் படி,  கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், எதிர்வரும் 16.10.2013 (புதன் கிழமையன்று) ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடப்படும் என்பதை அனைவருக்கும் அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்." இவ்வாறு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது . 

No comments:

Post a Comment