தேடல் தொடங்கியதே..

Friday 11 October 2013

கீழக்கரை வடக்குத் தெரு தொழுகை திடலில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் - உடனடியாக சீரமைக்க 'கீழக்கரை நகர் நல இயக்கம்' கோரிக்கை !

கீழக்கரை வடக்குத் தெருவில் கொந்தக்கருனை அப்பா தர்ஹா செல்லும் பாதையில் (மணல் மேட்டிற்கு அருகில்) அமைந்திருக்கும் ஈத்கா தொழுகை திடலில் நோன்புப் பெருநாள்  மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில், வருடம் தோறும் பெருநாள் தொழுகைகள் நடை பெற்று வருகிறது. இங்கு 500 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தங்கள் குழந்தைகளுடனும், குடும்பத்தாருடனும் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்வர்.  


தலைவரே.. இன்னைக்கு 'பவர் கட்' இருந்ததாலே தப்பிச்சீங்க  

தற்போது இந்த திடலின் மேல்புறம் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள், கை தொடும் தூரத்தில் மிக தாழ்வாக செல்கின்றது. இதனால் இந்த பகுதியில் குடியிருக்கும் பொது மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். எதிர் வரும் 16.10.2013 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகையும் வழக்கம் போல் இங்கு நடை பெற உள்ளது. இதனால் ஆபத்தான நிலையில் தாழ்வாக செல்லும் இந்த மின் கம்பிகளை சரி செய்ய இந்த பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்தனர். 



இந்நிலையில் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் சார்பாக, கீழக்கரை துணை மின் நிலையத்தின் உதவி மின் பொறியாளரை சந்தித்து தகுந்த புகைப்பட ஆதாரங்களுடன் கோரிக்கை  மனு அளிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது நகர் நல இயக்கத்தின் செயலாளர் சேகு பசீர் அஹமது, உறுப்பினர்கள் அ.தி.மு.க நகர் செயலாளர் இராஜேந்திரன், முஹம்மது சாலிஹ் ஹுசைன் ஆகியோர்கள் உடனிருந்தனர். கோரிக்கை மனுவினை ஏற்ற உதவி மின் பொறியாளர், அதனை உடனடியாக பரிசீலனை செய்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். 


No comments:

Post a Comment