தேடல் தொடங்கியதே..

Wednesday 14 August 2013

கீழக்கரையில் இருந்து இராமநாதபுரம் செல்லும் தனியார் பேருந்தில் 'இரகசியக் கேமராக்கள்' - பொதுமக்கள் அதிர்ச்சி !

கீழக்கரையில் இருந்து இராமநாதபுரத்திற்கு இயக்கப்படும் தனியார் பேருந்தின் ( டவுன் பஸ் CAS ) உட் புறத்தில், சில தினங்களுக்கு முன்னர் திடீரெனெ நான்கு இரகசியக் கண்காணிப்பு கேமராக்கள் இருப்பது கண்டு பேருந்து பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இராமநாதபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் வேறு எந்த தனியார் பேருந்திலும் இது போன்று கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பதும்  பேருந்தில் கேமரா வைத்துக் கண்காணிப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழக அரசு இதற்கு முறையான அனுமதி அளித்துள்ளதா..? என்பது தெரியவில்லை.


இது குறித்து சமூக ஆர்வலர் சேகு சதக் இபுறாஹீம் அவர்கள் கூறும் போது "கீழக்கரையில் இருந்து இராமநாதபுரத்திற்கு இந்த CAS பேருந்தில் தான் நம் பெண்கள் அதிகம் பயணம் செய்கின்றனர். அவர்கள் கூட்டம் அதிகமாக உள்ள போது, அமர்வதற்கு இடம் கிடைக்காத நிலையில், பேருந்தின் மேல் புறம் உள்ள கம்பியை பிடித்து செல்லும் நிலையே உள்ளது. 

அந்த வேளைகளில் அவர்களின் அங்கங்களை பதிவு செய்ய நேரிடும். அந்த கேமேரா பதிவுகளை தவறான வழியில் பயன்படுத்திட வாய்ப்புள்ளது. எனவே பொருத்தப்பட்டிருக்கும் கேமேராக்களை உடனடியாக அகற்றி பொதுமக்கள் அச்சத்தை போக்க வேண்டும். இது பற்றி CAS நிர்வாகம் மறுபரிசிலனை செய்ய வேண்டும். 

இது போல் தனியார் பேருந்துகளில் கேமராக்கள் பொருத்துவதற்கு அரசின் அனுமதி உள்ளதா..? என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக சம்பந்தப்பட்ட துறையினரிடம் விளக்கம் கேட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.

இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையிலும், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளதாக CAS பஸ் நிறுவனம் தெரிவித்தாலும், இது அனைத்து சமுதாய பெண்மணிகள் அதிகமதிகம் பயணிக்கும் வழித்தடம் என்பதால், கேமராக்களை உடனடியாக அகற்ற வேண்டும். தமிழகத்திலேயே முதல் முறையாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வேலூர் உள்ளிட்ட சில இடங்களில் தனியார் பேருந்துகளில் பயணிகளைக் கண்காணிக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்ட பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 


ஆனால் அந்த பேருந்துகளில் எடுக்கப்பட்ட பதிவுகள், தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என ஆரம்பத்திலேயே அப்பகுதி மக்கள் குரல் கொடுத்ததன் பேரில் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர்  தஞ்சாவூர் அருகே பொருள்காட்சித் திடலில் உள்ள பெணகள் கழிவறைகளில், இரகசிய கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், சமூக விரோதிகளால்  இணைய தளங்களில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சமூக ஆர்வலர் சேகு சதக் இபுறாஹீம் அவர்கள் 

விழிப்புடன் இருப்போம்..      விழிப்புணர்வு பெறுவோம்...

1 comment:

  1. அடுத்த அடி CAS BUS தான்
    By:
    Ervai Guyz

    ReplyDelete