தேடல் தொடங்கியதே..

Wednesday 14 August 2013

கீழக்கரையில் 'மழை தொழுகை' - TNTJ சார்பாக நாளை (15.08.2013) நடை பெறுகிறது !

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் வேலையில் முகவை மாவட்டம் கீழக்கரையில் மிகவும் வறட்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் வீடுகளில் உள்ள கிணறுகளில் கூட நீர் இல்லாத நிலைமை ஏற்ப்பட்டு இருக்கிறது. இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்றும், நேற்று முன்தினமும் பெய்த மழை கீழக்கரையில் பெய்யவில்லை. 

மக்களின் அடிப்படை தேவையாக இருக்கிற இந்த மழையை கேட்டு, இறைவனிடம் பிராத்திக்க நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த மழை தொழுகையை தவிர வேறெந்த வழிமுறையும் இல்லாத நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக மழை தொழுகை நாளை (15.08.2013) காலை 7:30 மணிக்கு தெற்கு தெரு 'கிஸ்கிந்தா திடலில்' நடைபெற இருக்கிறது.
                       தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கீழக்கரை 
                                  
   தொடர்புக்கு 9003866159, 9842959701

No comments:

Post a Comment