தேடல் தொடங்கியதே..

Friday 8 November 2013

கீழக்கரை 18 வது வார்டு பகுதியில் ஆபத்தான மரக் கிளைகள் அதிரடியாக அகற்றம் - துரித நடவடிக்கை எடுத்த கவுன்சிலருக்கு நன்றி !

கீழக்கரை சின்னகடை தெரு பகுதியில்  (முத்தலிபு மாமா அரிசிக் கடை அருகாமையில்) நிற்கும் மரத்தின் கிளை, உயர் அழுத்த மின்சார கம்பிகளில் உரசி செல்வதால், மின் கம்பத்தில் (மின் கம்ப எண் : 18/29) நகராட்சியால் பொருத்தப்பட்டு இருக்கும் தெருவிளக்கு அடிக்கடி பழுதாகி வந்தது. மேலும் சில வேளைகளில் டிரான்ஸ்பார்மரில், மின் தடையும் (FUSE) ஏற்பட்டு பொதுமக்களை அவதிக்குள்ளாகியது. இது சம்பந்தமாக கடந்த சில நாள்களுக்கு முன்னர் கீழை இளையவன் வலை தளத்தில் செய்தி  வெளியிடப்பட்டது.





                      நேற்று வரை.....                                                            இன்று....

இது குறித்து நாம் நேற்று வெளியிட்டிருந்த பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும். 


இந்நிலையில் இன்று 18 வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இபுறாகீம் அவர்களின் முயற்சியில் மரக் கிளைகள் வெட்டி அகற்றபட்டதோடு, தெருவிளக்கும் பழுது இல்லாமல் இரவில் ஒளி உமிழ்வதற்கு  வழிவகை செய்யப்பட்டது. 



முழுமையாக அகற்றப்பட்ட மரக் கிளைகள் 

இது குறித்து இந்த மின் கம்பத்தின் அருகாமையில் உள்ள இல்லத்தில் வசிக்கும் சகோதரர். முஹம்மது ஹுசைன் அவர்கள் கூறும் போது 

"இந்த பகுதியில் ஆபத்தான நிலையில் மரக்கிளைகள், மின்சார வயரில் உரசி அடிக்கடி பிரச்சனை எழுந்து வந்தது. கடந்து சில தினங்களுக்கு முன்னர் கீழை இளையவன் வலைதளத்தில், புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியிட்ட பிறகு இன்று மரக்கிளைகள் அகற்றப்பட்டு விட்டது. 

இது உணமையிலேயே மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தியாக இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கும் முகமாக விழிப்புணர்வு செய்தி வெளியிட்ட கீழை இளையவன் வலை தளத்திற்கும், உடனடியாக மரக் கிளைகளை வெட்ட நடவடிக்கை எடுத்த 18 வது வார்டு உறுப்பினர் முகைதீன் இபுறாஹீம் அவர்களுக்கும், எங்கள் தெரு மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இது குறித்து 18 வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இபுறாகீம் அவர்கள் கூறும் போது 

"இங்கு பல்லாண்டு காலமாக மின்சார உயர் அழுத்த வயர்களின் மீது மரக் கிளைகள் உரசிக் கொண்டிருந்தது. இதனால் விரைந்து சரி செய்யக் கோரி இந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இது சம்பந்தாக, கீழை இளையவன் வலை தளத்தில் செய்தி வெளியிட்டமைக்கு நன்றி. இது போன்ற செய்திகளால் துரிதமாக செயல்பட்டு மக்கள் பணியாற்ற முடிகிறது. இன்று மரக் கிளைகள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது. தெருவிளக்கும் முறையாக சரி செய்யப்பட்டு விட்டது.

இதே போல் சின்னக்கடைத் தெருவில் (கருவாட்டுக் கடை சமீபம் ) நிற்கும் பட்டுப் போன மரத்தையும் விரைவில் அகற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார வாரியத்தினரின் ஒத்துழைப்போடு முயற்சி மேற்கொள்கிறேன்." என்று தெரிவித்தார். 

No comments:

Post a Comment