தேடல் தொடங்கியதே..

Monday 4 November 2013

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் TNPSC குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி !

துணை வணிகவரி அதிகாரி, தலைமைச் செயலக பிரிவு அதிகாரி உள்பட பல்வேறு பதவிகளில் 1064 காலி இடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) டிசம்பர் 1-ம் தேதி குரூப்-2 முதல் நிலைத் தேர்வை தமிழகம் முழுவதும் நடத்துகிறது. இந்தத் தேர்வுக்கு ஏறத்தாழ 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

சுற்றறிக்கை (தமிழில்)


சுற்றறிக்கை (ஆங்கிலத்தில்)


இந்நிலையில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் TNPSC குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் எதிர் வரும் 06.11.2013 முதல் 22.11.2013 வரை நடை பெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், தங்கள் பெயரை நாளை (05.11.2013) செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்குள் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் அலைப் பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நல்ல வாய்ப்பினை கீழக்கரை பகுதி ஆர்வமுடையவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். 

No comments:

Post a Comment