தேடல் தொடங்கியதே..

Thursday 8 August 2013

துபாய் உள்ளிட்ட வளைகுடாவின் பல்வேறு பகுதிகளில் நாளை (08.08.2013) வியாழக்கிழமை ஈகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது !

துபாய் உள்ளிட்ட வளைகுடாவின் பல்வேறு பகுதிகளில் நாளை 08.08.2013 வியாழக்கிழமை ஈகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. அங்கு ஷவ்வால் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், ஜோர்டான், பாலஸ்தீனம், கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வியாழக்கிழமை ஈகைத் திருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.



ஓமன் நாட்டில் ஷவ்வால் பிறை தென்படாததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஈகைத் திருநாள் கொண்டாடப்படும் என தெரிகிறது. இதே நாளன்று இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் ஈகைத் திருநாள் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானில் ஷவ்வால் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து வியாழக்கிழமை ஈகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment