தேடல் தொடங்கியதே..

Tuesday 6 August 2013

கீழக்கரையில் நோன்பு பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா - தெற்கு தெரு ஜமாஅத் 'அல் மத்ரசத்துல் இஸ்லாமியா' மக்தப் பாடசாலை சார்பாக நடை பெற்றது !

கீழக்கரை தெற்கு தெரு ஜமாஅத் 'அல் மத்ரசத்துல் இஸ்லாமியா' மக்தப் பாடசாலை மூலமாக மூன்றாம் ஆண்டு நோன்பு வைத்த சுமார் 40 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி ஜமாஅத் உறுப்பினர்களுடன் ஆதரவுடன் தெற்கு தெரு ஜும்மா பள்ளி வாசலில், 05-08-13 அன்று இரவு தரவீஹ் தொழுகைக்கு பின்னர் ஜமாத்தார்கள் முன்னிலையில் நடைபெற்றது .



இந்த நிகழ்ச்சியில் முதல் பரிசை ஜமாஅத் பொருளாளர் சாதிக் அவர்களும், இரண்டாவது பரிசை ஜமாஅத் தலைவர் ஹாலிது சுல்த்தான் அவர்களும், மூன்றாவது பரிசை துணை தலைவர் சேக் யூசுப் அவர்களும் வழங்கினர். முன்னதாக ரமலான் மாதம் நோன்பு வைத்து ஐந்து நேரமும் தொடர்ந்து ஜமாத்துடன் தொழுத மாணவர்களை பாராட்டி தெற்கு தெரு கதீப் அஹமது அமானி ஆலிம் அவர்கள் பேசினார்.. இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை மக்தப் பாட சாலையின் தலைவர் MMK .அலிப்தீன் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்.

                   தகவல் : சமூக ஆர்வலர். சேகு சதக் இப்ராஹீம் அவர்கள்

No comments:

Post a Comment