தேடல் தொடங்கியதே..

Saturday 10 August 2013

கீழக்கரை TNTJ '500 பிளாட்' கிளையின் சார்பாக நடை பெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை !

கீழக்கரை நகரில், இஸ்லாமிய மக்களின் வசத்திக்கு ஏற்ப, வருடம் தோறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 500 பிளாட், தெற்குத் தெரு, கிழக்குத் தெரு உள்ளிட்ட மூன்று பகுதிகளில், நோன்புப் பெருநாள் 'திடல் தொழுகை' நடை பெற்று வருகிறது. நேற்றைய பெருநாள் தினத்தில் (09.08.2013), 500 பிளாட் பகுதியில் நடை பெற்ற திடல் தொழுகை, சரியாக காலை 7.30 மணிக்கு துவங்கி, குத்பா பேருரையுடன் முடிவுற்றது. 

பெருநாள் பேருரையை சகோதரர். அமீர் அப்பாஸ் அவர்கள் ஆற்றினார்கள். இந்த தொழுகையில் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு, இறைவனுக்கு நன்றி செலுத்தினர்.

No comments:

Post a Comment