தேடல் தொடங்கியதே..

Friday 9 August 2013

கீழக்கரையில் 'ஈகைத் திருநாள்' புகைப்படங்கள் - முக நூல் நண்பர்களின் அழகிய அணிவகுப்பு !

முஸ்லிம்களின் முதல் பெருநாளும் முக்கியத் திருநாளுமாகிய 'ஈதுல் பித்ர்' நோன்புப் பெருநாள் அகிலத்தில் வாழும் கோடான கோடி மக்களுக்கு மத்தியில் சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சாந்தியை, சமாதானத்தை ஏற்படுத்தும் உன்னத நாளாக விளங்குகிறது. கீழக்கரை இன்றைய பெருநாள் தினத்திலே முஸ்லிம்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்திருந்து, குளித்து புத்தாடையணிந்து, நறுமணம் பூசி, இன்சுவை உணவுகள் உண்டு, பின்னர் நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற திறந்தவெளி திடல் மற்றும் பள்ளிவாசல்கள் நோக்கி விரைந்தனர்.

அங்கு திரளாக குழுமிய இஸ்லாமிய பெருமக்கள் ஒன்று கூடி தக்பீர் முழக்கம் செய்து இறைவனைப் புகழ்ந்து நன்றி செலுத்தினர். மைதானங்கள் மற்றும் பள்ளிவாசல்களிலே தமது சகோதரர்களுடன் தோளோடு தோள் சேர்த்து நின்று பெருநாள் தொழுகை தொழுது, பின்னர் ஒருவரோடு ஒருவர் கட்டித் தழுவி தமது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.  அதே போல், தமது உறவினர்,நண்பர்கள், இல்லம் சென்று பெருநாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். 

கீழக்கரை நகரில் பல்வேறு பகுதிகளில் பெருநாள் தினமான இன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களின் வரிசை இதோ :














 

No comments:

Post a Comment