தேடல் தொடங்கியதே..

Sunday 4 August 2013

கீழக்கரை புதுக் கிழக்குத் தெரு 'முகைதீன் மஸ்ஜித்' வளாகத்தில் வழங்கப்படும் ருசிமிகு நோன்புக் கஞ்சி & இஃப்தார் விருந்து நிகழ்ச்சி - காணொளி வீடியோ காட்சி ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 14)

கீழக்கரை புதுக் கிழக்குத் தெருவில் இருக்கும் முகைதீன் மஸ்ஜிதில், ரமலான் மாதம் முழுவதும் ஒவ்வொரு வருடமும், நோன்பாளிகளுக்கு ருசி மிகு நோன்புக் கஞ்சி வழங்கப்படுகிறது. இதனை வாங்குவதற்காக அந்தப் பகுதி, இஸ்லாமிய சிறுவர், சிறுமியர்கள் வரிசையில் நின்று, தங்கள் இல்லங்களுக்கு வாங்கிச் செல்கின்றனர். அது போலவே வருடம் தோறும் இந்த பள்ளியில் நோன்பு திறக்கும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியும், ரமலான் நோன்பு காலம் முழுவதும் வெகு சிறப்பாக நடை பெற்று வருகிறது. 


மேலும் ரமலான் முப்பது நாள்களிலும், இந்த முகைதீன் மஸ்ஜிதில் இரவுத் தொழுகை (தராவீஹ்) முடிந்தவுடன் தொழுகையாளிகளுக்கு இட்லி, தோசை, நூடுல்ஸ், பிரியாணி, இடியாப்பம் போன்ற உணவு வகைகள் கண்ணியமாக பரிமாறப்படுகிறது. இந்த புதுக் கிழக்குத் தெரு பகுதியானது, ஏழை எளியவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.



இவ்வாறு வழங்கப்படும் சேவைகளால், இந்த பகுதி நோன்பாளிகள் நோன்பு மாதத்தினை எவ்வித சிரமமுமின்றி இறைக் கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர். இறையோனின் அருளை கொள்ளையிடும் வகையில் இந்த சிறப்பான சேவைகளை கீழக்கரை 'குருவிப் பிள்ளை சம்மாட்டி' குடும்பத்தார்கள் (மூர் டிராவல்ஸ்) நல்ல முறையில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இங்கு வழங்கப்படும் நோன்புக் கஞ்சி குறித்த காணொளி வீடியோ காட்சி


இங்கு ரமலான் முழுதும் நடை பெறும் 'இப்தார் விருந்து' குறித்த காணொளி வீடியோ காட்சி


நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த ' ரமலான் ஸ்பெசல்' பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.

கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)

கீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் சுவைமிகு நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 3)


கீழக்கரையில் நோன்பு திறக்க பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் நோன்பாளிகள் - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 4)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/4.html

கீழக்கரை நகரில் திறக்கப்பட்டிருக்கும் ரமலான் மாத ஸ்பெஷல் கடைகள் - நோன்பாளிகள் மகிழ்ச்சி ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 5)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/5.html

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் தினமும் நடைபெறும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்பு - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 6)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/6.html


இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் 'ரமலான் நோன்பு 2013' - அழகிய கண் கவர் புகைப்படங்களின் அணி வகுப்பு ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 7)

கீழக்கரையில் SDPI கட்சியினர் நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - பொதுமக்கள் திரளாக பங்கேற்பு ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி 8)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/sdpi-8.html


கீழக்கரை வடக்குத் தெரு தைக்காவில் வழங்கப்படும் கமகமக்கும் நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 9)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/9.html

கீழக்கரையில் 'ஏர்செல்' நிறுவனம் மற்றும் 'SAK கம்யூனிகேஷன்' இணைந்து நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 10)  

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/sak-10.html 

கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் சார்பாக, ஆண்டு தோறும் ரமலான் நோன்பு காலத்தில் செய்யப்படும் சிறப்பான சேவைகள் ! ரமலான் ஸ்பெஷல்  (பகுதி-11)
http://keelaiilayyavan.blogspot.in/2013/08/11.html

கீழக்கரை தாசீம் பீவி கல்லூரியில் நடை பெற்ற ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - சமூக ஆர்வலர்கள் திரளாக பங்கேற்பு ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 12)  

 http://keelaiilayyavan.blogspot.in/2013/08/12.html

கீழக்கரையில் அஹமது தெரு ASWAN சங்கத்தினர் நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 13)  


<<<<<  ரமலான் ஸ்பெசல் - இன்னும் வரும்....

FACE BOOK COMMENTS : 

  • Keelakarai Ali Batcha அப் பகுதியில் நாளுக்கு நாள் ஜனப் பெருக்கம் கூடி வருகிறது எனபது கண் கூடான உண்மை. முயற்சி செய்து இப் பள்ளியில் ஜும்மா நடத்த நாடினால் நிச்சயமாக நாயன் கருணை புரிவான்.

    ஏற்கனவே மரியாதைக்குரிய குருவி பிள்ளை சம்மாட்டி குடும்பத்தினர் இப்பள்ளியையும், பழைய சுங்க
    த்துறை அலுவலத்திற்கு பின் புறத்தில் (பெத்திரி தெரு)பெண்கள் தொழுகைப் பள்ளியையும் சிறப்புடன் நடத்தி வருகின்றனர்.ஆக. ஜும்மா தொழுகை நடத்துவது அவர்களுக்கு சாத்தியமானதே. அல்ஹம்துலில்லாஹ்
     
  • Sheak Meeran அருமை
     
  • Fouz Ameen இது எங்க ஏரியாக் கஞ்சி, சுவையிலும் மனத்திலும் அடடா அற்புதம் அற்புதம்..ஏழை மக்கள் வாழும் இந்த பகுதியில், ரமலான் மாதம் முழுசும் நல்ல சேவைகளை தொடர்ந்து தரும் மூர் டிராவல்ஸ் அசனுதீன், ஜெயனுதீன் சகோதரர்களின் பணிகள் மென் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

2 comments:

  1. கீழக்கரை அலி பாட்சா4 August 2013 at 22:57

    அப் பகுதியில் நாளுக்கு நாள் ஜனப் பெருக்கம் கூடி வருகிறது எனபது கண் கூடான உண்மை. முயற்சி செய்து இப் பள்ளியில் ஜும்மா நடத்த நாடினால் நிச்சயமாக நாயன் கருணை புரிவான்.

    ஏற்கனவே மரியாதைக்குரிய குருவி பிள்ளை சம்மாட்டி குடும்பத்தினர் இப்பள்ளியையும், பழைய சுங்கத்துறை அலுவலத்திற்கு பின் புறத்தில் (பெத்திரி தெரு)பெண்கள் தொழுகைப் பள்ளியையும் சிறப்புடன் நடத்தி வருகின்றனர்.ஆக. ஜும்மா தொழுகை நடத்துவது அவர்களுக்கு சாத்தியமானதே. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete