தேடல் தொடங்கியதே..

Thursday 15 August 2013

கீழக்கரை மக்தூமியா பள்ளியில் நடை பெற்ற சுதந்திர தின விழா - பள்ளியின் முன்னாள் மாணவர் 'கீழை ராசா' தேசியக் கொடியேற்றி, சுதந்திர தின உரையாற்றினார் !

இந்திய சுதந்திர தின விழா மக்தூமியா பள்ளிகளின் சார்பாக இன்று (15.08.2013) காலை 8.45 மணியளவில் மக்தூமியா பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அப்பள்ளியின் முன்னால் மாணவரும், அமீரகத்தின் கட்டிட கலை வல்லுனருமான 'கீழை ராசா' என்று அழைக்கப்படும் முஹம்மத் ராஜா கான் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி  சுதந்திர தின உரை நிகழ்த்தினார்கள். 




இவ்விழாவில் பழைய குத்பா பள்ளியின் தலைவர் ஹாஜா முகைதீன் , துணை தலைவர் கிதுரு முஹம்மது, ஹமீது இபுராஹிம் (சார்), ஹசனுதீன் , லெப்பை தம்பி மாஸ்டர், உள்ளிட்ட கல்வி குழு உறுபினர்கள், முன்னால் தாளாளர் ஹிதாயத்துல்லாஹ், கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் அபு சாலிஹ் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் திரளாக பொதுமக்களும், மாணவ மணிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். மக்தூமியா சமூக நல அமைப்பு, (மாசா), வீ சீ டி, சங்கு குழி ஆள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினரும் கலந்து கொண்டனர். 



விழா ஏற்பாடுகளை மக்தூமியா தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தி பிரேமா, மக்தூமியா உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ண வேணி ஆகியோர்களின் தலைமையில் இரு பள்ளி ஆசிரிய பெருமக்களும் சிறப்பாக செய்து இருந்தனர். மாணவ செல்வங்களின் திறமைகள் வெளி காட்டபட்டன. தலை சிறந்த திறமையாளிகளுக்கு  பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவின் இறுதியில் இனிப்புகள் வழங்கப்பட்டது. 






 நன்றி : சங்கர் ஸ்டூடியோ (படங்கள்)

1 comment:

  1. இப்பதான் கீழக்கரை மிராசு மாதிரி இருக்கு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete