தேடல் தொடங்கியதே..

Thursday 7 November 2013

கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு - பழைய குத்பா பள்ளி ஜமாஅத் !

கீழக்கரை ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளி ஜமாத்தை சேர்ந்த‌ கச்சு மரைக்காயர் தெரு மர்ஹூம்.முஹம்மது அப்பாஸ், மர்ஹூமா 'பிள்ளைக்கனி' என்கிற உசேன் பீவி ஆகியோர்களின் மகனும், மர்ஹூம். நெய்னா முஹம்மது அவர்களின் மருமகனும், சுபைதா அவர்களின் கணவரும், ஜெமீமா, யாஸ்மீன், பக்ருதீன், முஹம்மது அமீன் ஆகியோர்களின் தகப்பனாரும், முஹம்மது ரபீக், பாதுசா மரிக்கா ஆகியோர்களின் மாமனாருமாகிய 'முஹம்மது காசீம்'அவர்கள்  நேற்று (07.11.2013) அதிகாலை 3.30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். 



இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று (07.11.2013) இரவு 8.30 மணியளவில், பழைய குத்பா பள்ளி மைய வாடியில் நடை பெற்றது. மர்ஹூம். முஹம்மது காசீம் அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு : அமீன் - 9003433325

1 comment:

  1. கீழக்கரை அலி பாட்சா8 November 2013 at 20:02

    அஸ்ஸலாமு அலைக்கும். வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

    வார்த்தை எதுவுமே இல்லை கண்ணீரைத் தவிர.

    அன்னாரின் மஃபிரத்துக்கும், ரஹ்மானின் கருணையினால் ஜன்னத் பிர்தவுஸில் நற்பதவி கிடைக்கவும்,கண்மணி செய்யதினா ரசூலே கரீம் ஸல்லாஹு அலைஹி வ ஸல்லத்தின் ஷபாத் கிடைக்கவும் நீராடும் கண்களோடும் விம்மும் நெஞ்சத்தோடும் இரு கரம் ஏந்தி ஏக இறைவனிடத்தில் இறைஞ்சுகின்றோம், மன்றாடுகிறோம்.ஆமீன்

    இந்த அன்பு சகோதரரை இழந்து ஆறா துயர் உற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் அனைத்து தரபினர்க்கும் ’’ஸப்ரன் ஜமீலா’’ என்னும் அழகிய பொறுமையை வல்ல அல்லாஹு சுபுஹானஹுத்தாலா அள்ளி அள்ளி வழங்க உள்ளம் உருக பிரார்த்திகின்றோம் ..மன்றாடுகிறோம்.ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.

    ReplyDelete