தேடல் தொடங்கியதே..

Thursday 24 October 2013

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியின் ஏற்பாட்டில் மாணவர்கள் கேரளாவிற்கு 'கல்விச் சுற்றுலா' - பெற்றோர்கள் வழியனுப்பி வைத்தனர் !

கீழக்கரை தெற்குத் தெரு இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியின் சார்பாக மாணவர்களை அழைத்து செல்லும் கல்வி சுற்றுலா பயணம் இன்று (23.10.2013) இரவு 10 மணியளவில் இஸ்லாமியா பள்ளிகள் வளாகத்தில் இருந்து இனிதே துவங்கியது. தங்கள் பிள்ளைகளை வழியனுப்ப பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் குவிந்திருந்தனர். மாணவ செல்வங்களும் மகிழ்வுடன் புறப்பட்டு சென்றனர். கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொச்சின், எர்ணாகுளம் மற்றும் கேரளாவின் சுற்றுலா தளங்களுக்கும் செல்லும் நான்கு நாள்கள் கல்வி சுற்றுலாவை இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் M.M.K.முகைதீன் இபுராகீம் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.



இஸ்லாமியா பள்ளிகளின் சார்பாக, பள்ளியின் மாணவர்கள் கடந்த ஆண்டு, டார்ஜிலிங், கொல்கத்தா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு கல்வி சுற்றுலா சென்ற போது நாம் வெளியிட்டிருந்த பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.




இதில் இப்பள்ளியின் 8 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை உள்ள 72 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியப் பெருந்தகைகள், ஆசிரியர் திரு.அருள் டேவிஸ் ராஜ் அவர்கள் தலைமையில் சென்றுள்ளனர். முன்னதாக, தெற்குத் தெரு பள்ளியின் தலைமை இமாம் அமானி ஆலீம் அவர்கள் பயணத்திற்கான துஆ வை ஓதி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். பள்ளியின் முதல்வர் மேபல் ஜஸ்டிஸ் அவர்கள் கல்வி சுற்றுலாவை நல்ல முறையில் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

இஸ்லாமியா பள்ளி மாணவர்களின், இந்த கல்விச் சுற்றுலா இனிதே சிறப்புற, கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனவார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

No comments:

Post a Comment