தேடல் தொடங்கியதே..

Thursday 24 October 2013

கீழக்கரையில் ஆபத்தான நிலையில் இருக்கும் பழைய கட்டிடங்களை இடிக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் !

கீழக்கரையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பிரதான சாலைகளிலும், தெருக்களிலும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பழைய கட்டிடங்கள் பல இடங்களில் காணப்படுகிறது. பெரிய அளவில் வெடிப்புகளுடன் அதன் மதில் சுவர்களும், சாரமும் சிதலமடைந்து காணப்படுவதால் எந்நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. பள்ளி சிறுவர்களும், முதியவர்களும் அந்த கட்டிடங்களின் வழியே செல்வதை காணும் போதே 'இடிந்து விழுந்து விடுமோ..?' என மனம் பதறித் துடிக்கிறது.




இடம் : கண்ணாடி வாப்பா திருமண மண்டபம் எதிர் புறம், பழைய பேருந்து நிலையம் 

தற்போது கீழக்கரை நகரில் மழை பெய்ய துவங்கியிருப்பதால், ஏற்கனவே விழும் நிலையில் இருக்கும் மதில் சுவர்கள் ஊறி போய் பொது பொதுவென ஆபத்தை விளைவிக்கும் நிலையில் நிற்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட பாபு ஆட்டோ ஸ்டாண்ட் அருகே பேருந்திற்காக நின்றிருந்த முதியவர்கள் தலையில் திடீரென பால்கனி சிலாப் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இடம் : புறாக் கடை சமீபம், அபாய மரம் எதிரில், செக்கடி 

இது குறித்து நாம் வெளியிட்டிருந்த பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.



 இடம் : அலியார் வகையறா கட்டிடம், கிழக்குத் தெரு 



இடம் : நைஸ் வாப்பா கடை (SVM வகையறா கட்டிடம்), வள்ளல் சீதக்காதி சாலை


இடம் : பாப்புலர் மெடிக்கல் எதிர்புறம், முஸ்லீம் பஜார் 


இடம் : பழைய அபின் கடை, நடுத் தெரு 

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பே தவிர்க்கும் முகமாக, இது போன்ற அபாய கட்டிடங்களை உடனடியாக இடித்து பொதுமக்கள் நலனை காக்க சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர்களும், நகராட்சி நிர்வாகமும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்பது கீழக்கரை நகர மக்களின் மேல் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. 

No comments:

Post a Comment