தேடல் தொடங்கியதே..

Wednesday 10 July 2013

கீழக்கரையில் புனித ரமலான் நோன்பு நாளை (11.07.2013) துவக்கம் - கீழக்கரை டவுன் காஜி அறிவிப்பு !

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் முக்கிய கடமைகளில் ஒன்று ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருப்பது ஆகும். தமிழகமெங்கும் இன்று முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த நோன்பு துவக்க நாள், ரமலான் பிறை நேற்று எங்கும் தென்படாத காரணத்தாலும், ஷாபான் மாதம் முழுமையாக நிறைவடைந்து விட்டதாலும், நாளை (வியாழக்கிழமை) முதலாவது நோன்பு என்ற‌ முறைமையை, கீழக்கரை டவுன் காஜி A.M.M.காதர் பக்‌ஷ் ஹுஸைன் ஸித்தீகி ஆலிம் வெளியிட்டுள்ளார்.


இதனை தொடர்ந்து கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நாளை (11.07.2013) முதல் ரமலான் நோன்பு நோற்கப்படுகிறது. நாளை அதிகாலை 4.19 மணிக்கு, நோன்பு வைக்கும் சஹர் நேரம் முடியும் முடிவடைகிறது. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நோன்பு நேரம் அதிகமாக இருக்கும். முதல் நோன்பு அதிகபட்சமாக 14 மணி நேரம் மற்றும் 43 நிமிடங்களைக் கொண்டதாக இருக்கும்.


இது படிப்படியாக நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குறைந்து கடைசி ரமலான் நோன்பு 14 மணி நேரம் மற்றும் 21 நிமிடங்களாக இருக்கும். இம்முறை ஐந்து வெள்ளிக் கிழமைகள் ரமலான் நோன்பில் இருக்க வாய்ப்புள்ளது. அதாவது, 29 வது நோன்பு நாளான ஆகஸ்ட் 8ம் தேதி வியாழக்கிழமை ரமலான் பிறை தென்படாமல் போனால், அடுத்த நாள் வெள்ளிக்கிழமை 30வது நோன்பு நாளாக கணக்கில் கொள்ளப்படும். 


துபாய் உள்ளிட்ட வளைகுடாப் பகுதிகளில் ரமலான் நோன்பு இன்று (10.07.2013) புதன்கிழமை துவங்கியது: இதனையொட்டி செவ்வாய்க்கிழமை தராவீஹ் எனும் சிறப்பு இரவுத் தொழுகை துவங்கியது. துபாயில் தமிழக முஸ்லிம்கள் அதிகம் இருந்து வரும் தேரா குவைத் பள்ளி, கோட்டைப் பள்ளி, அஸ்கான் டி-பிளாக் உள்ளிட்ட இடங்களிலும் சிறப்புத் தொழுகைகளில் அதிகமானோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment